SL vs BAN: 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை– வங்கதேசம் பலப்பரீட்சை: மழையால் பாதிக்கப்படுமா?

Published : Sep 09, 2023, 10:48 AM IST
SL vs BAN: 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கை– வங்கதேசம் பலப்பரீட்சை: மழையால் பாதிக்கப்படுமா?

சுருக்கம்

இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடக்கிறது.

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

மகன் அங்கத் பும்ராவை பத்திரமாக பாத்துக்க சொல்லி விட்டு சூப்பர் 4 சுற்றுக்காக இந்திய அணியுடன் இணைந்த பும்ரா!

முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2ஆவது சூப்பர் 4 சுற்று போட்டியானது இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Asia Cup 2023: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடிக்க வேண்டும் – ரோகித் சர்மா!

கொழும்பு மைதானத்தில் கடந்த சில் நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இந்தப் போட்டி மட்டுமின்றி அடுத்து நடக்க உள்ள சூப்பர் 4 சுற்றுப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

India vs Pakistan சூப்பர் 4 போட்டி மழையால் நின்றால் நின்ற இடத்திலிருந்து போட்டி தொடங்க ரிசர்வ் டே அறிவிப்பு!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

அவுட்டான கடுப்பில் மைதானப் பொருட்களை சேதப்படுத்திய கே.கே.ஆர் வீரர்.. செக் வைத்த பிசிசிஐ!
MS Dhoni: இனி கிரவுண்டுக்கே வர மாட்டார்..? அணிக்கு திரும்பாத தோனியால் ஏக்கத்தில் ரசிகர்கள்..