South Africa vs Netherlands: ஈரமான அவுட்பீல்டு, மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!

Published : Oct 17, 2023, 02:10 PM IST
South Africa vs Netherlands: ஈரமான அவுட்பீல்டு, மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!

சுருக்கம்

தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 15ஆவது லீக் போட்டி தரம்சாலா மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.

இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலும், நியூசிலாந்து 2ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 4ஆவது இடத்திலும் உள்ளன.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அணியாக ஹாட்ரிக் தோல்வி அடைந்த இலங்கை!

நெதர்லாந்து விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு டாஸ் போட இருந்த நிலையில், ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 2.30 மணிக்கு போட்டி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியா CWC கைப்பற்ற 5000 எலுமிச்சம் பழம் கொண்டு துர்கா தேவியின் மணல் சிற்பம் வரைந்து சுதர்சன் பட்நாயக்!

ஆனால், அதற்குள்ளாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன காரணமாக டாஸ் போடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 7 போட்டிகளில் 6ல் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதே போன்று உலகக் கோப்பை கிரிகெட்டில் விளையாடிய 3 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி தான் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் 15ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.

IND vs PAK: இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது பெண் போலீஸை தாக்க முயன்ற ரசிகருக்கு கன்னத்தில் பளார் பளார்!

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!