WPL Opening Ceremony: பிரம்மாண்டமாக தொடங்கிய WPL – ராமையா வஸ்தாவய்யா பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷாருக்கான்!

Published : Feb 23, 2024, 07:51 PM IST
WPL Opening Ceremony: பிரம்மாண்டமாக தொடங்கிய WPL – ராமையா வஸ்தாவய்யா பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷாருக்கான்!

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனின் தொடக்க விழா பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது தொடக்க விழா நிகழ்ச்சியோடு பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், வருண் தவான், ஷாகீத் கபூர், சித்தார்த் மல்கோத்ரா, டைகர் ஷெராஃப், கார்த்திக் ஆர்யன் ஆகியோர் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

 

கார்த்திக் ஆர்யன் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியையும், சித்தார்த் மல்கோத்ரா டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், டைகர் ஷெராஃப் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும், வருண் தவான் யுபி வாரியர்ஸ் அணியையும், ஷாகித் கபூர் மும்பை இந்தியன்ஸ் அணியையும் அறிமுகம் செய்தனர். ஷாருக்கான் நடனம் ஆடி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

 

 

இதையடுத்து இன்று நடக்கும் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லேனிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யுபி வாரியர்ஸ் என்று 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

 

 

இந்த தொடரில் மொத்தமாக 22 போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், எல்லா போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இறுதிப் போட்டியானது மார்ச் 17 ஆம் தேதி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க இருக்கிறது. முதல் சீசன் ஹோம் பார்மேட்டில் நடந்தது. ஆனால், இந்த சீசனுக்கான எல்லா போட்டிகளும் டெல்லி மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடத்தப்படுகிறது.

 

 

இந்த 5 அணிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில், 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டரில் மோதும். மேலும் முதல் இடத்தில் இருக்கும் அணியானது நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வெறித்தனமான CSK ரசிகர்.. திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை போட்ட கிரிக்கெட் ஒப்பந்தம்!
IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!