IPL 2023: டெல்லி அணிக்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் ஆதரவு தர வரும் ரிஷப் பண்ட்!

Published : Apr 04, 2023, 01:31 PM IST
IPL 2023: டெல்லி அணிக்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் ஆதரவு தர வரும் ரிஷப் பண்ட்!

சுருக்கம்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் விளையாடும் இன்றைய போட்டிக்கு ரிஷப் பண்ட் வருவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் தெரிவித்துள்ளார்  

ஐபிஎல் 2023 தொடர் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 அணிகளுமே ஒவ்வொரு போட்டியில் விளையாடியுள்ளன. இதில் ஒரு சில அணிகள் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளன. அதில், டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஒன்று. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி அணி ஹோம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. 

IPL 2023: குஜராத் டைட்டன்ஸ் உடன் டெல்லி கேபிடல்ஸ் பலப்பரீட்சை: போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு!

ஏற்கனவே நடப்பு சாம்பியன் வேறு, முதல் போட்டியிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக குஜராத டைட்டன்ஸ் அணி விளங்கிறது. ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியில் கலீல் அகமது, முகேஷ் குமார், சேத்தன் சகாரியா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை. ரன்களை வாரி வழங்கினர். ஆனால், டெல்லி அணியில் இடம் பெற்ற ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி நிகிடி ஆகிய் வேகப்பந்து வீச்சாளர்கள் இன்று நடக்கும் போட்டியின் மூலமாக அணியில் இடம் பெறுவார்கள்.

IPL 2023: நோபால், வைடு வீசிக்கிட்டே இருந்தால் வேற கேப்டன் கீழ் தான் விளையாடனும்: வார்னிங் கொடுத்த தோனி!

 

 

இந்த நிலையில், தான் கார் விபத்து காயம் காரணமாக ஐபிஎல் தொடைரிலிருந்து விலகிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விலகினார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், முதல் போட்டியின் போது அவரது ஜெர்சியை வீரர்கள் அமர்ந்திருக்கும் போர்டில் வைத்திருந்தனர். அந்தப் போட்டிக்கு அவர் வரவில்லை. இந்த நிலையில் டெல்லியில் இன்று நடக்கும் போட்டியில் ரிஷப் பண்ட் இடம் பெறுவார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ராஜன் மஞ்சந்தா தெரிவித்துள்ளார்.

IPL 2023: பழிக்கு பழி, வெற்றிக்கு வெற்றி; கடந்த சீசனில் அடைந்த அவமானத்திற்கு பிராய்ச்சித்தம் தேடிய சிஎஸ்கே!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..