ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்!

Published : Oct 11, 2023, 02:52 PM IST
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கருப்பு பட்டை அணிந்த வீரர்கள்!

சுருக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆப்கானிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 9ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து இரு அணி வீரர்களும் தேசிய கீத பாடலுக்காக மைதானத்திற்குள் வந்தனர்.

IND vs AFG:ஒரே போட்டியில் அஸ்வினுக்கு ஓய்வு; ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு: ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்

அப்போது ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் அனைத்து வீரர்களும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு தேசிய கீத பாடல் ஒலிக்கப்பட்டது. அதன் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

PAK vs SL: ஹைதராபாத்தில் சாதனை: மைதான பராமரிப்பாளர்களுக்கு ஜெர்சியை பரிசாக அளித்து மரியாதை செய்த பாபர் அசாம்!

இவ்வளவு ஏன், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் உலகக் கோப்பையில் தான் பெறும் சம்பளம் அனைத்தையும் ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு வழங்குவதாக அறிவித்தார். ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவானது.

கொச்சி லுலு மாலில் உலக கோப்பை கிரிக்கெட் முன்னிட்டு பாகிஸ்தான் தேசியக் கொடி சர்ச்சை; லுலு குழுமம் மறுப்பு!!

இதையடுத்து அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்படவே கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்தையும் கடந்தது. மேலும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளானர்.

India vs Pakistan: அகமதாபாத் புறப்பட்டுச் செல்லும் சுப்மன் கில் – IND vs PAK போட்டிக்கு தயாராக திட்டம்?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!