No Beef: மாட்டிறைச்சிக்கு தடை: சிக்கன், மட்டன், மீன், வீரர்கள் விரும்பும் உணவுகளுக்கு அனுமதி!

Published : Sep 29, 2023, 08:24 PM IST
No Beef: மாட்டிறைச்சிக்கு தடை: சிக்கன், மட்டன், மீன், வீரர்கள் விரும்பும் உணவுகளுக்கு அனுமதி!

சுருக்கம்

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகள் இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரையில் தொடர்ந்து நடக்கிறது. இன்று மட்டுமே 3 போட்டிகள் நடக்கிறது. வார்ம் அப் போட்டிகளைத் தொடர்ந்து, 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ODI World Cup Schedule: : ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் எங்கு, எப்போது நடக்கிறது?

இந்த நிலையில் வீரர்களின் உணவு மருத்துவ வசதிக்கு என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமின்றி ஜிம், நீச்சல் குளம், யோகா ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்காக இந்தியா வந்துள்ளது அனைத்து அணிகளுக்கும் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மட்டன், சிக்கன், மீன் வகைகள், காய்கறிகள் கொண்ட உணவு வகைகளை செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

IND vs ENG Warm Up Match:38 மணி நேரமாக எகானமி கிளாஸில் பயணித்த இங்கிலாந்து வீரர்கள்: ஜானி பேர்ஸ்டோவ் விமர்சனம்!

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பாஸ்மதி அரிசி சாப்பாடு, ஹைதராபாத் பிரியாணி வகைகள் கொண்ட உணவு பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த மாநிலங்களிலும் கிடைக்கும் உணவுகளையும், வீரர்கள் விரும்பக் கூடிய உணவுகளையும் சமைத்து தர சமையல் கலைஞர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், வெளிநாட்டு உணவு வகைகளும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லப்படுகிறது.

Warm Up Matches: ஒரே நேரத்தில் 3 போட்டிகள்: தொடங்கிய வார்ம் அப் போட்டிகள், RSA vs AFG போட்டி மழையால் பாதிப்பு!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!