கொரோனா தொற்று உறுதி – தனிமைப்படுத்திக் கொண்ட டெவோன் கான்வே!

Published : Jan 19, 2024, 01:45 PM IST
கொரோனா தொற்று உறுதி – தனிமைப்படுத்திக் கொண்ட டெவோன் கான்வே!

சுருக்கம்

நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரரான டெவோன் கான்வேவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே 3 போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து தொடரை 3-0 என்று இழந்துவிட்டது. இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி தற்போது கிறிஸ்ட்சர்சில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி தற்போது பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக சாண்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தனக்கு தானே சிக்கலை தேடிக் கொள்ளும் அஜிங்க்யா ரஹானே – ரஞ்சி டிராபியில் தொடர்ந்து கோல்டன் டக்!

இந்த நிலையில் தான் நியூசிலாந்து தொடக்க வீரர் டெவோன் கான்வேவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய போட்டிக்கு முன்னதாகவே அவருக்கு உடல் நல பாதிப்பு இருந்தது. இதன் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஜெர்மனி அணியிடம் ஷூட் அவுட்டில் இந்தியா தோல்வி – கட்டாய வெற்றியை நோக்கி ஜப்பானுடன் பலப்பரீட்சை!

இதன் காரணமாக இன்றைய போட்டியில் அவருக்குப் பதிலாக சாத் பவுஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால், பிளேயிங் 11ல் இடம் பெறவில்லை. இந்த தொடரில் இதுவரையில் விளையாடிய 3 போட்டிகளில் கான்வே 0, 20, 7 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் கோல்டன் டக் – பீல்டிங்கில் கலக்கிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு