பாகிஸ்தானை பந்தாடிய ஃபின் ஆலன் – 3ஆவது போட்டியில் வெற்றி; 3-0 என்று தொடரை வென்ற நியூசிலாந்து!

Published : Jan 17, 2024, 06:01 PM IST
பாகிஸ்தானை பந்தாடிய ஃபின் ஆலன் – 3ஆவது போட்டியில் வெற்றி; 3-0 என்று தொடரை வென்ற நியூசிலாந்து!

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்று வென்றுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி இன்று நடந்தது.

எஸ்ஏ20 லீக் தொடர் – சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி, துள்ளிக் குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்!

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர் ஃபின் ஆலன் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஒருபுறம் அவர் அதிரடியாக விளையாட மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

முதலில் ஜிம் ஒர்க் அவுட், இப்போ யோகா பயிற்சி - வைரலாகும் ஹர்திக் பாண்டியா புகைப்படம்!

கடைசியாக ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரி, 16 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் அவர் 16 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக, டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய், கிரஹாம் நேப்பியர் மற்றும் தசுன் ஷனாகா ஆகியோரது 16 சிக்ஸர்கள் சாதனையை சமன் செய்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் மட்டுமே 18 மற்றும் 17 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இறுதியாக நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மட்டுமே அரைசதம் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி 18 வயதில் இந்திய செஸ் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 வீரரான பிரக்ஞானந்தா!

இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி வரும் 19 ஆம் தேதி கிறிஸ்ட்சர்சில் தொடங்குகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!