தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்!

Published : Jun 13, 2023, 10:25 AM IST
தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்!

சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

கடந்த 2013 ஆண்டு ஐபிஎல் சூதாட்டத்தில் தோனி ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த சம்பத் குமார் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். இதன் எதிரொலி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரியான சம்பத் குமார் விசாரணை நடத்தினார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

TNPL 2023: கடைசி வரை போராடிய துஷார் ரஹேஜா: ஓபனிங் மேட்சிலேயே 70ல் ஜெயிச்ச லைகா கோவை கிங்ஸ்!

இதையடுத்து, தனது பெயர் மற்றும் புகழுக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி நடந்து கொண்டதாகவும், ரூ.100 கோடி இழப்பீடு தரக் கோரியும் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சம்பத் குமார் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட கேஎல் ராகுல்: வைரலாகும் மாணவனின் வீடியோ!

இதைத் தொடர்ந்து தோனி தாக்கல் செய்த மனுவிற்கு, சம்பத் குமார் பதில் மனு தாக்கல் செய்தார். இதில், நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பு என்பதால், சட்டப்படி தண்டிப்பட வேண்டும் என்று தோனி தரப்பில் கோரப்பட்டது.

இந்த நிலையில், தோனி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPL 2023: ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய விஜய் சங்கர்: ஐபிஎல்லில் விட்டதிலிருந்து தொடங்கிய சாய் சுதர்ஷன்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!