படையப்பா வசனத்துக்கு கச்சிதமா பொருந்தும் தோனி – ருதுராஜ்: தோனியே கேப்டனா இருந்திருக்கலாமோ!

Published : Mar 27, 2024, 11:27 AM IST
படையப்பா வசனத்துக்கு கச்சிதமா பொருந்தும் தோனி – ருதுராஜ்: தோனியே கேப்டனா இருந்திருக்கலாமோ!

சுருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தோனியின் பீல்டிங் செட்டப் தான் என்று சொல்லப்படுகிறது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஹோம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

வரலாற்றை மாற்றி எழுதிய மஞ்சள் பாய்ஸ் – ஹோம் மைதானத்தில் சிஎஸ்கேவுக்கு கிடைத்த 2ஆவது வெற்றி!

முதல் போட்டியில் டாஸ் மட்டுமே போட வந்த ருதுராஜ் கெய்க்வாட், அதன் பிறகு பீல்டிங் செட்டப் எல்லாவற்றையும் தோனி தான் மேற்கொண்டார். யாரை எங்கு நிறுத்த வேண்டும்? எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று கச்சிதமாக நிறுத்தி விக்கெட்டுகள் எடுத்தார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியைத் தொடர்ந்து மீண்டும் ஹோம் மைதானத்தில் சிஎஸ்கே 2ஆவது போட்டியில் நேற்று விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 51 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 46 ரன்னும் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்னும் எடுத்தனர்.

MS Dhoni, IPL 2024: வயசு நம்பர் தானு நிரூபித்த தோனி – டைவ் அடித்து கேட்ச் பிடிக்க கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

இதைத் தொடர்ந்து 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், ஒவ்வொரு விக்கெட்டிலும் தோனியின் பங்கு இருக்கிறது. எந்த பீல்டரை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று ஒவ்வொரு ஓவரிலும் தனது கேப்டன்ஸி அனுபவத்தை தோனி வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுக்க உதவினார்.

நேற்றைய போட்டியில் ரச்சின் ரவீந்திரா மட்டும் 3 கேட்சுகள் பிடித்தார். ஒரு கேட்சை கோட்டைவிட்டார். இந்தப் போட்டியில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே மற்றும் முஷ்தாபிஜூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டேரில் மிட்செல் மற்றும் மதீஷா பதிரனா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

MS Dhoni Wait for Batting: மாணவர்களை பரீட்சைக்கு அனுப்பிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்த ஆசிரியர் தோனி!

இப்படி களத்தில் எல்லாவற்றையுமே தோனி செய்யும் போது ஏன், அவரை அவசர அவசரமாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தான் தெரியவில்லை. கோடிக்கணக்கான ரசிகர்கள் தோனி தான் கேப்டனாக தொடர வேண்டும் என்று ஆசைப்படும் நிலையில், இந்த ஆண்டு அவர் ஓய்வு பெறுவதற்கான சூழல் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு புதிய கேப்டன் தடுமாறிடக் கூடாது என்பதற்காக இந்த ஆண்டே புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Vijay Shankar Retirement: கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன விஜய் சங்கர்!திடீர் முடிவுக்கான பின்னணி!
Sai Sudharsan: சிஎஸ்கேவை கதற விட்ட தமிழன்! விராட் கோலி சாதனையை சமன் செய்த சாய் சுதர்சன்!