கேக்கல, சத்தமா என்று கேட்ட லிட்டன் தாஸூக்கு சென்ட் ஆஃப் கொடுத்த விராட் கோலி, சிராஜ்!

Published : Dec 15, 2022, 08:18 PM IST
கேக்கல, சத்தமா என்று கேட்ட லிட்டன் தாஸூக்கு சென்ட் ஆஃப் கொடுத்த விராட் கோலி, சிராஜ்!

சுருக்கம்

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேக்கல சத்தமா என்று கேட்ட லிட்டன் தாஸூக்கு இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி ஆகியோர் தாஸ் செய்தது போன்று செய்து காட்டி சென்ட் ஆஃப் கொடுத்துள்ளனர்.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. இதில், புஜாரா (90), ரிஷப் பண்ட் (46), ஷ்ரேயாஸ் ஐயர் (86), ரவிச்சந்திரன் அஸ்வின் (58) மற்றும் குல்தீப் யாதவ் (40) ஆகியோர் தங்களது பங்கிற்கு ரன்கள் குவித்தனர்.

இது வெறும் தொடக்கம் தான்டா தம்பி.. அறிமுக இன்னிங்ஸில் சதமடித்த அர்ஜுன் டெண்டுல்கருக்கு அக்கா சாரா வாழ்த்து

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹோஷைன் ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாகிர் ஹாசன் 20 ரன்களிலும், யாஷிர் அலி 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ரஞ்சி டிராபி: சுதர்சன், ஜெகதீசன், அபரஜித் அபார சதம்.. ஹைதராபாத்துக்கு எதிராக தமிழ்நாடு அணி ஆதிக்கம்

இவர்களைத் தொடர்ந்து வந்த லிட்டன் தாஸ் 30 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் சேர்த்தார். போட்டியின் 13 ஆவது ஓவரை வீசிய சிராஜின் முதல் பந்தில் லிட்டன் தாஸை பார்த்து சிராஜ் ஏதோ பேச, அதற்கு லிட்டஸ் தாஸோ கேக்கல், சத்தமா என்று கேட்டு சிராஜை நோக்கி வந்துள்ளார். அப்போது நடுவர் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் அதே ஓவரின் 2 ஆவது பந்தில் லிட்டன் தாஸ் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதை வைத்து லிட்டன் தாஸை கிண்டல் செய்யும் வகையில் அவர் எப்படி செய்தாரோ அதே போன்று செய்து காட்டி அவரை வழியனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BAN vs IND First Test: இந்தியா அபார பந்து வீச்சு – 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்த வங்கதேசம்!

2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதே அணி 44 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இதில், இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?