NAMAN: சிறந்த சர்வதேச அறிமுக வீரர்களுக்கான விருது – மாயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி, அக்‌ஷர் படேல்!

Published : Jan 23, 2024, 07:31 PM IST
NAMAN: சிறந்த சர்வதேச அறிமுக வீரர்களுக்கான விருது – மாயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி, அக்‌ஷர் படேல்!

சுருக்கம்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பை அளித்த மாயங்க் அகர்வால், அக்‌ஷர் படேல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பிசிசிஐ விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்களுக்கு என்று பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதே போன்று உள்ளூர் தொடர்களான ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, கூச் பெஹார் டிராபி என்று உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது. கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.

அதன் பிறகு இந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ விருது வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் பிசிசிஐ சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியினர், இந்திய மகளிர் அணியினர், ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், கிரிக்கெட் வீரர்களின் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பை அளித்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது வழங்கப்பட்டது. இதில், 2019 – 20 ஆம் ஆண்டுகளில் சிறந்த அறிமுக வீரருக்கான விருது மாயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.

2020 – 21: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் – அக்‌ஷர் படேல் (டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் 5 விக்கெட்)

2021 – 22: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் – ஷ்ரேயாஸ் ஐயர் (105 டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்)

2022 – 23: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (171 டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்)

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!