ராம் அரவிந்த் அதிரடியால் லைகா கோவை கிங்ஸ் 199 ரன்கள் குவிப்பு!

Published : Jun 27, 2023, 09:33 PM IST
ராம் அரவிந்த் அதிரடியால் லைகா கோவை கிங்ஸ் 199 ரன்கள் குவிப்பு!

சுருக்கம்

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 199 ரன்கள் குவித்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 19ஆவது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.

முழங்கால் காயம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் லோன் – பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டேன் – சுரேஷ் ரெய்னா!

தொடக்க வீரர் சுஜய் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் இந்தப் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராம் அரவிந்த் கடைசி வரை நின்று அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

சென்னையில் நடக்க இருந்த போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம்: எல்லாமே நரேந்திர மோடி மைதானமா?

 

சேலம் ஸ்பார்டன்ஸ்:

அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் சும்ரா, கௌசிக் காந்தி, மான் ஃபாப்னா, எஸ் அபிஷேக்ம், முகமது அத்னான், சன்னி சந்து, அபிஷேக் தன்வார் (கேப்டன்), ராஜேந்திரன் கார்த்திகேயன், சச்சின் ரதி, எம் கணேஷ் மூர்த்தி

லைகா கோவை கிங்ஸ்:

எஸ் சூர்யா, எஸ் சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், யு முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), எம் முகமது, ஆதீக் யுஆர் ரஹ்மான், சித்தார்த், வள்ளியப்பன் யுதிஸ்வரன், ஜதவேத் சுப்பிரமணியன்

IND vs PAK World Cup 2023: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் – வீரேந்தர் சேவாக் கணிப்பு!

பந்து வீச்சு தரப்பில் சன்னி சந்து 3 விக்கெட்டுகளும், சச்சின் ரதி, கௌசிக் காந்தி மற்றும் அபிஷேக் தன்வார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து 200 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடி வருகிறது. தற்போது வரையில் 3 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!