LSG vs RCB: முக்கியமான எலிமினேட்டர் போட்டி மழையால் தாமதம்.. டாஸ் எப்போது..? இதோ அப்டேட்

By karthikeyan VFirst Published May 25, 2022, 7:46 PM IST
Highlights

லக்னோ - ஆர்சிபி இடையேயான எலிமினேட்டர் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிளே ஆஃப் போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. 

எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 2வது தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும். அந்த போட்டியில் ஜெயித்தால் ஃபைனலுக்கு முன்னேறலாம்.

எனவே இந்த எலிமினேட்டரில் வெற்றி பெறும் முனைப்பில் தான் களமிறங்கும். கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். 7  மணிக்கு டாஸ் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்குவது தாமதமாகியுள்ளது. 

இரவு 7.55 மணிக்கு டாஸ் போடப்பட்டு 8.10 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!