GT vs RR: மில்லர் அதிரடி அரைசதம்; பிளே ஆஃபில் ராஜஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

By karthikeyan VFirst Published May 24, 2022, 11:33 PM IST
Highlights

முதல் தகுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. 
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால், முகமது ஷமி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹால், ஒபெட் மெக்காய்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் 28 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் 3 சதங்கள் அடித்த பட்லர் அதன்பின்னர் சில போட்டிகளில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிய நிலையில், இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி கடைசி பந்துவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய பட்லர்56 பந்தில் 89 ரன்களை குவித்தார். 20 ஓவரில் 188 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

189 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். அதன்பின்னர் கில்லும் மேத்யூ வேடும் இணைந்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், 21 பந்தில் 35 ரன்கள் அடித்த கில் ரன் அவுட்டாகி வெளியேறினார். மேத்யூ வேடும் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் விழுந்தாலும் குஜராத் அணியின் ரன் வேகம் எந்த சூழலிலும் குறையவேயில்லை. அதை குறையாமல் பார்த்துக்கொண்டவர் கேப்டன் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியாவும் டேவிட் மில்லரும் இணைந்து விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல், அதேவேளையில் அடித்து ஆடியும் ஸ்கோர் செய்தனர்.

கடைசி வரை பரபரப்பாக சென்ற போட்டியில், கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து கொடுத்தார் பட்லர். 38 பந்தில் 68 ரன்கல் அடித்தார் பட்லர். 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

click me!