#SLvsIND இந்திய ஆல்ரவுண்டருக்கு கொரோனா பாசிட்டிவ்..! இன்று நடக்கவிருந்த 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு

By karthikeyan VFirst Published Jul 27, 2021, 4:10 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இந்திய ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, அதைத்தொடர்ந்து நடந்துவரும் டி20 தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

2வது டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்பில் நடக்கவிருந்த நிலையில், இந்திய அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்விளைவாக, இன்று இரவு நடக்கவிருந்த 2வது டி20 போட்டி, நாளைக்கு(ஜூலை 28) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. க்ருணல் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

click me!