பிரமாண்டமாக நடக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்! நேரம் எப்போது தெரியுமா?

Published : Jan 23, 2023, 12:39 PM ISTUpdated : Jan 23, 2023, 01:39 PM IST
பிரமாண்டமாக நடக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்! நேரம் எப்போது தெரியுமா?

சுருக்கம்

கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமணம் இன்று மாலை 4 மணிக்கு மகராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் நடக்க இருக்கிறது.  

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு இருவீட்டார் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் 12பி, தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் தான் பாலிவுட் நடிகையான அதியா ஷெட்டி. இவர், ஹீரோ, முபாரகான், மோட்டிஜோர் சக்னாஜோர், நவாப்ஷாடே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இருவரும் துபாய் சென்று அங்கு ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!

இந்த நிலையில், 23 ஆம் தேதியான இன்று மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து இன்று மாலை 4 மணிக்கு திருமணம் கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு நேற்று நடந்த சங்கீத நிகழ்ச்சியின் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ரிஷப் பண்ட் திரும்ப வருவது முக்கியம்: மகாகாலேஸ்வரர் கோயிலில் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்த இந்திய வீரர்கள்

சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து திருமணம் நிகழ்ச்சி நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தை முடித்த கையோடு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார். இந்த டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மூத்மேன் கில்: சுப்மன் கில்லுக்கு புனைப்பெயர் வைத்த சுனில் கவாஸ்கர்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?