ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா 3ஆவது முறையாக நியமனம்!

Published : Jan 31, 2024, 08:22 PM IST
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா 3ஆவது முறையாக நியமனம்!

சுருக்கம்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா தொடர்ந்து 3ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா 3ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா, ஜெய் ஷா தான் தலைவராக வேண்டும் என்று முன் மொழிந்தார். இதையடுத்து மற்ற உறுப்பு நாடுகளும் அதனை ஏற்றுக் கொண்டனர்.

ரிங்கு சிங்கிற்கு ஜாக்பாட் – ரூ.3 கோடி பரிசு தொகை அறிவிப்பு, 3 கோடியை என்ன செய்ய போகிறார் தெரியுமா?

பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, பிசிசியின் தலைவராக வேண்டும் என்றால், செயலாளர் பதவி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆதலால், அவர் பிசிசிஐ தலைவர் பதவி வேண்டாமே வேண்டாம் என்ற முடிவோடு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 8ஆவது இடம்; இந்த ஆண்டு 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு 2ஆவது இடம் பிடித்து சாதனை!

ஆசிய கோப்பை தொடரானது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் மூலமாக நடத்தப்படுகிறது. ஏற்கனவே 2 முறை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருந்த ஜெய் ஷா தலைமையில் 2022ல் டி20 ஆசிய கோப்பை தொடரும், 2023ல் ஆசிய கோப்பை ஒரு நாள் தொடரும் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 3ஆவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய் ஷா தலைமையில் டி20 ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது. ஆனால், அது எப்போது நடக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

எனினும், ஆசிய கோப்பை டி20 தொடரை ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஓமன் நடத்த தயாராக இருப்பதாகவும், மற்ற நாடுகளும் போட்டி போடுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

தாயார் நலமாக இருக்கிறார் – பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் – விராட் கோலியின் சகோதரர்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!