Rain:இரவு 10.20 மணிக்குள் போட்டி நடக்கவில்லை என்றால், போட்டி ரத்து, சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெறும்!

Published : Sep 04, 2023, 09:53 PM IST
Rain:இரவு 10.20 மணிக்குள் போட்டி நடக்கவில்லை என்றால், போட்டி ரத்து, சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெறும்!

சுருக்கம்

இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் 5ஆவது லீக் போட்டியில் நேபாள் அணி முதலில் பேட்டிங் ஆடி 230 ரன்கள் எடுத்தது. பின்னர், 231 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி பேட்டிங் ஆடி வந்தது. ஆனால், 2.1 ஓவர்களில் இந்திய அணி 17 ரன்கள் எடுத்திருந்த போது போட்டியானது மழையால் நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், போட்டி ஓவர்கள் குறைக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. அதோடு, போட்டி கைவிடப்படவும் வாய்ப்பிருக்கிறது.

India vs Nepal: கோலி கோலி என்று கோஷமிட்ட ரசிகர்கள்; நடுவிரலை உயர்த்தி காட்டிய கௌதம் காம்பீரால் சர்ச்சை!

போட்டியானது 45 ஓவர்களாக குறைக்கப்பட்டால் 225 ரன்களும், 40 ஓவர்களாக இருந்தால் 207 ரன்களும், 35 ஓவர்களாக இருந்தால் 192 ரன்களும், 30 ஓவர்களாக இருந்தால் 174 ரன்களும், 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருந்தால் 130 ரன்களும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்படும். ஒருவேளை மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி பகிர்ந்து அளிக்கப்பட்டால் இந்திய அணிக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.

India vs Nepal: ஜடேஜாவை வச்சு ஸ்கெட்ச் போட்டு நேபாள் வீரர்களை தூக்கிய ரோகித் சர்மா!

இதன் காரணமாக இந்திய அணி 2 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். நேபாள் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு 10.20 மணிக்குள்ளாக போட்டி நடத்தப்படவில்லை என்றால் போட்டி ரத்தாகும். இரவு 11.36 மணி தான் கடைசி நேரமாகும்.

லட்டு கேட்சை கோட்டைவிட்டு, ஒரு கையால் கேட்ச் பிடித்த கோலி; ஒருநாள் கிரிக்கெட்டில் 143 கேட்ச் பிடித்து அசத்தல்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!