இப்போ ஃபீல் பண்ணுறேன்; இந்திய ரசிகர்களை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது – ஹாரி ப்ரூக்!

Published : Dec 08, 2023, 11:38 AM IST
இப்போ ஃபீல் பண்ணுறேன்; இந்திய ரசிகர்களை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது – ஹாரி ப்ரூக்!

சுருக்கம்

இந்திய ரசிகர்களை விமர்சித்ததற்காக தான் வருத்தப்படுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கிறது. நடந்து முடிந்த 16ஆவது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இங்கிலாந்து வீரர் ஹாரி ஃப்ரூக் ரூ.13.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அவர் விளையாடிய 11 போட்டிகளில் அவர், ஒரு சதம் உள்பட 190 ரன்கள் மட்டுமே எடுத்தார். பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை.

புதிதாக 2 அணிகள் அறிமுகம்; சென்னை பிளிட்ஸில் ரூ.18 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட சமீர்!

இதன் காரணமாக வரும் 19 ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கும் ஏலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ஹாரி ஃப்ரூக் விடுவிக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி, சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ரந்த் சர்மா, அகீல் ஹூசைன், அடில் ரஷீத் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 – இந்தியா போராடி தோல்வி – ஷஃபாலி வர்மா ஆறுதல் அரைசதம்!

இந்த நிலையில், கடந்த சீசனில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை விமர்சித்ததற்காக தான் வருத்தப்படுவதாக ஹாரி ஃப்ரூக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நான் ஒரு முட்டாள். நேகாணலின் போது இப்படியொரு விஷயத்தை நான் கூறியிருக்க கூடாது. ஐபிஎல் தொடரின் போது அதிக நேரம் ஓய்வெடுக்க முடியும். அப்போது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, தேவையற்ற விஷயங்களை பார்க்க நேர்ந்தது.

Bangladesh vs New Zealand 2nd Test Day 1: வங்கதேசம் 172க்கு அவுட் – நியூசிலாந்து 55/5 ரன்கள் எடுத்து திணறல்!

அதன் பிறகு சோஷியல் மீடியாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டேன். ஆனால், இப்போது நான் சோஷியல் மீடியாவில் இருக்கிறேன். அதனை நான் பயன்படுத்தமாட்டேன். தனியாக அட்மின் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!