உலகக் கோப்பையில் கபில் தேவ் 175 ரன்கள் சாதனையை முறியடித்து கிளென் மேக்ஸ்வெல் சாதனை!

Published : Nov 08, 2023, 12:38 AM IST
உலகக் கோப்பையில் கபில் தேவ் 175 ரன்கள் சாதனையை முறியடித்து கிளென் மேக்ஸ்வெல் சாதனை!

சுருக்கம்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 201 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சாதனையை கிளென் மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ரன் சேஸ் 287 ரன்கள் மட்டுமே. அதுவும் கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிராக 287 ரன்களை சேஸ் செய்துள்ளது. ஆதலால், இந்தப் போட்டியில் 291 ரன்களை சேஸ் செய்யுமா என்ற கேள்வி இருந்தது. அதற்கேற்பவும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரும் இருந்தது.

உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்து கிளென் மேக்ஸ்வெல் சாதனை – 21 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் உடன் 201 நாட் அவுட்!

சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதில், டிராவிஸ் ஹெட் 0, மிட்செல் மார்ஷ் 24, டேவிட் வார்னர் 18, ஜோஷ் இங்கிலிஸ் 0, மார்னஷ் லபுஷேன் 14 ரன் அவுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6, மிட்செல் ஸ்டார் 3 என்று 18.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். உலகக் கோப்பையில் ஒரு நாள் போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் 200 ரன்களை கடந்து சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.

ருத்ரதாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் 201 நாட் அவுட் – வரலாற்று சாதனையோடு அரையிறுதிக்கு முன்னேற்றம்!

அவர் 128 பந்துகளில் 21 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் உள்பட 201 ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக மார்டின் குப்தில் 237*, கிறிஸ் கெயில் 215 ஆகியோர் இரட்டை சதம் அடித்துள்ளனர். இவர்களது பட்டியலில் தற்போது மேக்ஸ்வெல்லும் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் ரன் சேஸில் 201 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் மேக்ஸ்வெல் தான் சொந்தக்காரர். பேட் கம்மின்ஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோசமான சாதனை – வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

இந்தப் போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஏபி டிவிலியர்ஸ் சாதனையை முறியடித்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா அதிக ரன்களை சேஸ் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் அதிரடி 201 ரன்கள் சாதனையால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு 3ஆவது அணியாக முன்னேறியது. மேலும், வரும் 16ஆம் தேதி நடக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

முதல் முறையாக உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!

ஒரு நாள் போட்டிகளில் 6ஆவது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சாதனையை மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார். அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்பிலும் அவரது சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, 138 பந்துகளில் 175 ரன்கள் குவித்து கபில் தேவ் சாதனை படைத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

Afghanistan vs Australia: இப்ராஹிம் ஜத்ரன் சதம், ரஷீத் கானின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் குவிப்பு!

இதே போன்று தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது தனி ஒருவனாக 201 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!