டி20 உலக கோப்பையில் அவர் தான் இந்திய அணியின் "X Factor" பிளேயர்..! கம்பீர், இர்ஃபான் பதான் ஒருமித்த குரல்

By karthikeyan VFirst Published Oct 19, 2021, 4:58 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் பிளேயர் யார் என்று கௌதம் கம்பீர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

டி20 உலக கோப்பை கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. வரும் 23ம் தேதி சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. 24ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி டிராபியை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. இந்திய அணியில் இளம் மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். ஃபாஸ்ட் பவுலிங்கில் பும்ரா, ஷமி ஆகியோரும், ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஆகியோரும், சீனியர் ஸ்பின்னர் அஷ்வினுடன் ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரும் உள்ளனர்.

அனுபவம் மற்றும் இளமை ஆகிய இரண்டும் கலந்த வலுவான அணியாக திகழும் இந்திய அணி, டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் யார் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் கௌதம் கம்பீர் மற்றும் இர்ஃபான் பதான் ஆகிய இருவரும் பேசினர்.

இதையும் படிங்க - ராகுல் டிராவிட் இடத்தில் நீங்கதான் இருக்கணும்..! பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த விவிஎஸ் லக்‌ஷ்மண்

அப்போது இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், ரோஹித், ராகுல், விராட் கோலி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கியமான வீரர்கள். ஆனால் பும்ரா தான் எக்ஸ் ஃபேக்டர் என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், வருண் சக்கரவர்த்தி கண்டிப்பாக சிறப்பாக ஆடுவார். மாயாஜால ஸ்பின்னரான அவர் நல்ல ஃபார்மிலும் உல்ளார். ஆனால் என்னை பொறுத்தமட்டில் எக்ஸ் ஃபேக்டர் என்றால் அது பும்ரா தான். பும்ராவைவிட பெரிய எக்ஸ் ஃபேக்டர் பிளேயர் அணியில் வேறு யாரும் இல்லை என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார்.
 

click me!