TATA IPL 2024 Fixtures: இனி ஆர்சிபி தான், சென்னை சேப்பாக்கம் சிஎஸ்கே கோட்டையாக இருக்காது – அபினவ் முகுந்த்!

Published : Feb 23, 2024, 01:54 PM IST
TATA IPL 2024 Fixtures: இனி ஆர்சிபி தான், சென்னை சேப்பாக்கம் சிஎஸ்கே கோட்டையாக இருக்காது – அபினவ் முகுந்த்!

சுருக்கம்

17ஆவது சீசனுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியானதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அபினவ் முகுந்த் சென்னை சேப்பாக்கம் சிஎஸ்கேயின் கோட்டையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் எப்போது தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு, பொதுத் தேர்தல் காரணமாக முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே ஏசியாநெட் தமிழ் நியூஸில் செய்தி வெளியிட்டது படி, மார்ச் 22 ஆம் தேதியே ஐபிஎல் 17ஆவது சீசன் தொடங்குகிறது. மேலும், முதல் போட்டியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது. அதுவும், சிஎஸ்கேயின் கோட்டை என்று சொல்லப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் இந்தப் போட்டியும் நடத்தப்படுகிறது.

IPL 2024 : வெளியானது ஐ.பி.எல் 2024க்கான அட்டவணை - முதல் போட்டியில் மோதப்போகும் அணிகள் எது தெரியுமா?

இந்த நிலையில் ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான அட்டவணை வெளியானதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த், இனி சென்னை சேப்பாக்கம் சிஎஸ்கேயின் கோட்டையாக இருக்காது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையில் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஆர்சிபி கிட்டத்தட்ட சேப்பாக்கத்தில் வெற்றியை நம்ப முடியாத அளவிற்கு நெருங்கிவிட்டது. ஆனால், இன்னும் எல்லையைத் தான் கடக்க முடியவில்லை. அது இந்த சீசனில் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் ஆர்சிபிக்கு சாதகமானதாக மாறி வருகிறது. இனி சேப்பாக்கம் சிஎஸ்கேயின் கோட்டையாக இருக்காது.

கடந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோல்வியை தழுவியிருக்கிறது.

Watch IND vs ENG 4th Test: டிராவிட்டிடம் கேப், தாயின் ஆசிர்வாதம் – அறிமுக டெஸ்ட்டில் சாதனை படைத்த ஆகாஷ் தீப்!

இருந்த போதிலும் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி டிராபியை கைப்பற்றியது என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு நடக்கும் 17ஆவது சீசனில் வெளியிடப்பட்ட அட்டவணையின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மார்ச் 22 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மார்ச் 26 ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!