RCBW vs DCW: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதுகெலும்பை உடைத்த டாரா நாரிஸ் 5 விக்கெட் கைப்பற்றி சாதனை!

Published : Mar 05, 2023, 07:04 PM IST
RCBW vs DCW: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முதுகெலும்பை உடைத்த டாரா நாரிஸ் 5 விக்கெட் கைப்பற்றி சாதனை!

சுருக்கம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி 163 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த தொடரின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி, கிரித்தி சனோன் ஆகியோரது நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகமே எதிர்பார்த்த முதல் போட்டி தொடங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி வெற்றி வாகை சூடியது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

போட்டி போட்டு சிக்சரும், பவுண்டரியுமா விளாசிய ஷெஃபாலி வர்மா, மேக் லேனிங் - டெல்லி கேபிடல்ஸ் 223 ரன்கள்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோஃபி டெவைன், ஹீதர் நைட், திஷா கசாட், எல்லிசே பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹூஜா, ஆஷா ஷோபனா, பிரீதி போஸ், மேகன் ஸுட், ரேணுகா தாகூர் சிங்.

டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி:

ஷெஃபாலி வெர்மா, மெக் லெனிங் (கேப்டன்), மரிஷனே கப், ஜெமைமா ரோட்ரிக்ஸ், அலைஸ் கேப்சி, ஜெசி ஜோனாசென், தனியா பட்டியா (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், டாரா நாரிஸ்

அதன்படி டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணியின் கேப்டன் மெக் லேனிங் மற்றும் ஷெஃபாலி வர்மா ஆகியோர் ரன் கணக்கை தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஷெஃபாலி வர்மா ஒவ்வொரு பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்காமல் ஒவ்வொருவரது ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி தள்ளினர்.

ரயிலை போன்று வேகமாக நடையை கட்டிய குஜராத் ஜெயிண்ட்ஸ் வீராங்கனைகள்: ஆறுதல் கொடுத்த தமிழக வீராங்கனை ஹேமலதா!

தொடக்க வீராங்கனைகள் இருவரும் அதிரடி காட்டி விளையாட முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தனர். மெக் லேனிங் 43 பந்துகளில் 14 பவுண்டரிகள் உள்பட 72 ரன்கள் அடித்தார். ஷெஃபாலி வர்மாவும் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 4 சிக்சர்கள் 10 பவுண்டரிகள், உள்பட 84 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 

எனினும், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிகமாக ரன் அடித்த முதல் வீர்ர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 65 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதோடு அந்த அணி 207 ரன்கள் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

WPL 2023 Opening Ceremony: கியாரா அத்வானி உற்சாக நடனம்: கோலாகலமாக தொடங்கிய மகளிர் பிரீமியர் லீக்!

இவரைத் தொடர்ந்து வந்த கேப் 39 ரன்களும், ஜெமைமா ரோட்ரிக்ஸ் 22 ரன்களும் எடுக்கவே டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்து 200 ரன்களுக்கு மேல் குவித்த 2ஆவது அணி என்ற பெருமையையும், மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் அதிக ரன்கள் குவித்த முதல் அணியை என்ற சாதனையையும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி படைத்துள்ளது. 

இதையடுத்து 224 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி களமிறங்கியது. இதில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷோஃபி டிவைன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தது. டிவைன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ஸ்மிருதி மந்தனா 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஹீதர் நைட் மட்டும் நிலைத்து நின்று ஆடி 34 ரன்கள் எடுத்தார். மேகன் ஷுட் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பந்து வீச்சு தரப்பில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் டாரா நாரிஸ் 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அலைஸ் கேப்சி 2 விக்கெட்டும், ஷிகா பாண்டே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

காயமடைந்த கேப்டன் பெத் மூனை கை தாங்கலாக தூக்கிச் சென்ற டீம் மெம்பர்ஸ்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!