டெல்லி பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 138 ரன்களில் சுருண்ட குஜராத் - 4ஆவது போட்டியிலும் தோல்வி!

Published : Mar 03, 2024, 11:40 PM IST
டெல்லி பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 138 ரன்களில் சுருண்ட குஜராத் - 4ஆவது போட்டியிலும் தோல்வி!

சுருக்கம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் மெக் லேனிங் மற்றும் ஷஃபாலி வர்மா  இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.

இதில், ஷஃபாலி வர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அடுத்து வந்த அலீஸ் கேப்ஸி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மெக் லேனிங் 41 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 55 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 ரன்னிலும், அன்னபெல் சுதர்லேண்ட் 20 ரன்னிலும், ஜெஸ் ஜோனாசன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக ஷிகா பாண்டே 14 ரன்கள் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் மேக்னா சிங் 4 விக்கெட்டும், ஆஷ்லெக் கார்ட்னர் 2 விக்கெட்டும், மன்னட் காஷ்யப் மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 164 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது.

இதில் தொடக்க வீராங்கனை லாரா வால்வோர்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் பெத் மூனி 12 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்தவர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக குஜராத் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 4 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. குஜராத் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!