சேப்பாக்கத்தில் உருவான துபே புயலால் சிஎஸ்கே கொட்டிய சிக்ஸர், பவுண்டரி மழை – ஜிடிக்கு 207 ரன்கள் இலக்கு!

Published : Mar 26, 2024, 09:26 PM IST
சேப்பாக்கத்தில் உருவான துபே புயலால் சிஎஸ்கே கொட்டிய சிக்ஸர், பவுண்டரி மழை – ஜிடிக்கு 207 ரன்கள் இலக்கு!

சுருக்கம்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 7ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் களமிறங்கினர்.

ரூ.1.80 கோடிக்கு ஒர்த்தா? சேப்பாக்கத்தில் 6, 4, 4, 4, 6, 4, 6, 4, 4 நிரூபித்து காட்டிய ரச்சின் ரவீந்திரா!

இதில், அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா ஒரு பவுலரையும் விட்டு வைக்கலாம் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார். 6, 4, 4, 4, 6, 4, 6, 4, 4 என்று விளாசி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அஜின்க்யா ரஹானே 12 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து தன் பங்கிற்கு 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு தான் சேப்பாக்கத்தில் துபே புயல் உருவானது. களத்திற்கு வந்த முதல் 2 பந்திலேயே சிக்சர் மழை தான். ஸ்டேடியமே உற்சாக, கரகோஷ மழையில் நனைந்தது. தனது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசிய சாய் கிஷோர், துபேவிற்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 22 பந்துகளில் 51 ரன்கள் கடந்தார். ஆனால், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

லட்டு மாதிரி ருதுராஜ் கெய்க்வாட் கையிலயே கொடுத்த கேட்ச் – கோட்டைவிட்ட தமிழக வீரர் சாய் கிஷோர்!

இவரைத் தொடர்ந்து வந்த அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி தனது முதல் ஐபிஎல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். மேலும், ஒரு சிக்சர் உள்பட 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் நிதானமாக விளையாடிய டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசில வந்த ஜடேஜா 7 ரன்கள் எடுத்தார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரஷீத் கான் 2 விக்கெட் கைப்பற்றினார். மோகித் சர்மா, சாய் கிஷோர் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

ரசிகர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!