முதல் முறையாக இந்தியா வந்த பாபர் அசாம்; உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியில் அரைசதம் அடித்து சாதனை!

Published : Sep 29, 2023, 10:43 PM IST
முதல் முறையாக இந்தியா வந்த பாபர் அசாம்; உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியில் அரைசதம் அடித்து சாதனை!

சுருக்கம்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முதல் முறையாக இந்தியாவிற்கு வந்துள்ள நிலையில், உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியில் அரைசதம் அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று முதல் 3 ஆம் தேதி வரையில் வார்ம் அப் போட்டியில் நடத்தப்படுகிறது. இன்று தொடங்கிய வார்ம் அப் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதின.

No Beef: மாட்டிறைச்சிக்கு தடை: சிக்கன், மட்டன், மீன், வீரர்கள் விரும்பும் உணவுகளுக்கு அனுமதி!

இதில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் கடைவிடப்பட்டது. இதே போன்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. தற்போது வங்கதேச அணி விளையாடி வருகிறது. இதே போன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் டாஸ் வென்று ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 345 ரன்கள் குவித்தது. இதில், முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி 94 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கல் உள்பட 103 ரன்கள் குவித்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

ODI World Cup Schedule: : ஐசிசி நடத்தும் அடுத்தடுத்த உலகக் கோப்பைகள் எங்கு, எப்போது நடக்கிறது?

இதே போன்று முதல் முறையாக இந்தியா வந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 84 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தியா வந்து தனது முதல் வார்ம் அப் போட்டியில் விளையாடிய பாபர் அசாம் அரைசதம் அடித்துள்ளார்.

IND vs ENG Warm Up Match:38 மணி நேரமாக எகானமி கிளாஸில் பயணித்த இங்கிலாந்து வீரர்கள்: ஜானி பேர்ஸ்டோவ் விமர்சனம்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!