ஹர்திக் பாண்டியாவின் வீடியோ வைரல் – சொத்தில் பாதி அம்மா பெயரில் இருக்கு!

Published : May 26, 2024, 03:47 PM IST
ஹர்திக் பாண்டியாவின் வீடியோ வைரல் – சொத்தில் பாதி அம்மா பெயரில் இருக்கு!

சுருக்கம்

ஹர்திக் பாண்டியா தனது சொத்தில் பாதியை தனது அம்மாவின் பெயரில் எழுதி வைத்திருப்பதாக கூறிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் செய்த நிலையில் அந்த ஆண்டில் மே 31 ஆம் தேதி கொரோனா லாக்டவுன் காரணமாக மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. 2 மாதங்களுக்கு பிறகு இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.

பேட் கம்மின்ஸ் நிற்கும் தோரணையை வைத்து டிராபி யாருக்கு என்று காட்டிய போட்டோஸ்!

கடந்த 2023 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும், இருவரும் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அதோடு, நடாஷாவை பிரிய நேரிட்டால், 70 சதவிகித சொத்தை ஹர்திக் பாண்டியா ஜீவனாம்சமாக கொடுக்க நேரிடும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தான், ஹர்திக் பாண்டியாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

டி20 உலகக் கோப்பை – அமெரிக்கா புறப்பட்ட ரோகித் சர்மா அண்ட் கோ – ஹர்திக், கோலி செல்லவில்லை – காரணம் தெரியுமா?

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த பாண்டியா, தமது சொத்தில் பாதியை தனது அம்மாவின் பெயருக்கு எழுதி வைத்திருப்பதாக அவர் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தான் வாங்கும் கார் மற்றும் வீடு எல்லாமே தனது அம்மாவின் பெயரில் தான் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதன் காரணமாக தன்னிடமிருந்து ஹர்திக் பாண்டியா ஜீவனாம்சமாக எதுவும் பெற முடியாது என்பதை விளக்கும் வகையில் தான் இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!