ஹர்திக் பாண்டியாவால் இந்திய அணியில் இடத்தை இழக்கும் சீனியர் வீரர்..!

By karthikeyan VFirst Published Oct 21, 2021, 6:52 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை என்றால், இந்திய அணி காம்பினேஷனை கருத்தில்கொண்டு புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்க்காமல் ஷர்துல் தாகூரைத்தான் ஆடவைக்க வேண்டும் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பையில் வரும் 24ம் தேதி இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. விராட் கோலி தலைமையில் முதல் ஐசிசி டிராபியை தூக்கும் முனைப்பில் உள்ள இந்திய அணி, அனுபவமும் இளமையும் கலந்த வலுவான அணியாக உள்ளது.

அதிரடி பேட்ஸ்மேன்கள், மாயாஜால ஸ்பின்னர் உட்பட தரமான ஸ்பின்னர்கள், உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலர்கள் என்ற நல்ல பேலன்ஸான அணியாக இந்திய அணி திகழ்கிறது.

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. 6 பேட்ஸ்மேன்கள் மற்றும் 5 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் இந்திய அணி ஆடவுள்ளது. ஷமி, பும்ரா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார்/ஷர்துல் தாகூர் மற்றும் அஷ்வின்/வருண் சக்கரவர்த்தி/ராகுல்  சாஹர் ஆகிய 5 பவுலர்களுடன் ஆடவுள்ளது.

ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதற்கு தகுந்த ஃபிட்னெஸுடன் இல்லாததால், அவர் பந்துவீசமாட்டார் என்று தெரிகிறது. அவர் பந்துவீசாதது இந்திய அணியின் பேலன்ஸை சற்று பாதிக்கிறது. ஏனெனில் அவர் பந்துவீசினால், அவர் 6வது பவுலிங் ஆப்சனாக இருப்பார். ஹர்திக் பாண்டியா பந்துவீசாததால் 6வது பவுலிங் ஆப்சனை உருவாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை இந்திய அணி தான் வெல்லும்..! இன்சமாம் உல் ஹக் அதிரடி

அதனால் 6வது பவுலிங் ஆப்சனாக ரோஹித், கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ ஆகிய மூவரும் தயாராகிவருகின்றனர். இந்த தகவலை ஆஸி.,க்கு எதிரான பயிற்சி போட்டியின் டாஸின்போது ரோஹித் சர்மா தெரிவித்தார். அந்த போட்டியில் கோலி 2 ஓவர்கள் பந்துவீசினார்.

ஹர்திக் பாண்டியா பந்துவீசாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். ஹர்திக் பாண்டியா பந்துவீசமாட்டார் என்றால், அணி பேலன்ஸை கருத்தில்கொண்டு புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை சேர்க்க வேண்டும் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!