ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஐபிஎல் 14வது சீசனின் பெஸ்ட் லெவன்..!

By karthikeyan VFirst Published Oct 17, 2021, 3:16 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
 

ஐபிஎல் 14வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. சிஎஸ்கே அணி 4வது முறையாக கோப்பையை வென்றது. இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி ஆகிய இளம் வீரர்கள் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன் பாராட்டுகளையும் குவித்தனர்.

இந்த சீசனில் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடியது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம். 635 ரன்களை குவித்த ஆரஞ்சு தொப்பியை ருதுராஜ் கெய்க்வாட்டும், 32 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்ஷல் படேல் நீலநிற தொப்பியையும் வென்றனர்.

இந்நிலையில், இந்த சீசனின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. சீசனின் சிறந்த தொடக்க வீரர்களாக, இந்த சீசனின் டாப் 2 ரன் ஸ்கோரர்களான ருதுராஜ்(655) மற்றும் டுப்ளெசிஸ்(633) ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலை புறக்கணித்தது ஏன்..? கேப்டன் கோலி விளக்கம்

3வது டாப் ரன் ஸ்கோரரான கேஎல் ராகுலை 3ம் வரிசை வீரராகவும், க்ளென் மேக்ஸ்வெல், ராகுல் திரிபாதி, ஹெட்மயர் ஆகியோரை மிடில் ஆர்டர் வீரர்களாகவும், ஸ்பின்னர்களாக ஜடேஜா, சாஹல், சிவி வருண் ஆகியோரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல் மற்றும் பும்ரா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார் ஆகஷ் சோப்ரா.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஐபிஎல் 14வது சீசனின் பெஸ்ட் லெவன்:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், ராகுல் திரிபாதி, ஷிம்ரான் ஹெட்மயர், ஜடேஜா, சாஹல், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷல் படேல், பும்ரா. 
 

click me!