IPL 2021 ஐபிஎல் டைட்டிலுக்கு தகுதியான அணி என்றால் அது இந்த அணி தான்! எதிரணியையும் புகழும் பெரிய மனசு தோனிக்கு!

By karthikeyan VFirst Published Oct 16, 2021, 11:13 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் டைட்டிலை வெல்ல தகுதியான அணி கேகேஆர் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி புகழாரம் சூட்டினார்.
 

ஐபிஎல் 14வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த சீசனின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதிய நிலையில், 27 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆரை வீழ்த்தி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி.

இறுதிப்போட்டிக்கு பின்னர் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, சிஎஸ்கேவை பற்றி பேசும் முன்பாக கேகேஆரை பற்றி பேச வேண்டியிருக்கிறது. கடும் சரிவிலிருந்து இந்தளவிற்கு கம்பேக் கொடுப்பது மிகக்கடினம். ஐபிஎல் டைட்டிலுக்கு தகுதியான அணி என்றால் அது கேகேஆர் அணி தான். அந்த அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களுக்குத்தான் அனைத்து கிரெடிட்டும் என்று தோனி புகழாரம் சூட்டினார்.

ஐபிஎல் 14வது சீசனில் இந்தியாவில் நடந்த முதல் பாகத்தில் 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் இருந்த கேகேஆர் அணி, அமீரகத்தில் நடந்த 2ம் பாகத்தில் அணியின் பலவீனங்களை எல்லாம் கலைந்து வலுவான அணியாக ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆடி தொடர் வெற்றிகளை பெற்றது. 2ம் பாகத்தில் கடைசி 7 லீக் போட்டிகளில் 5 வெற்றிகளுடன் மொத்தமாக 14 புள்ளிகளை பெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

எலிமினேட்டரில் ஆர்சிபியையும், தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடள்ஸையும் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய கேகேஆர் அணி, ஃபைனலில் சிஎஸ்கேவிடம் தோற்று 3வது முறையாக கோப்பையை தூக்கும் வாய்ப்பை இழந்தது.
 

click me!