சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து 33,904 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா காலக்கட்டத்தில் தொழில் முடக்கம் நிலவியதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என கருதினர். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து விலையும் விண்ணத்தைத் தொட்டது. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை விட தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால் அதன் விலையிலும் அவ்வப்போது ஏற்ற, இறக்கங்களை காண முடிகிறது.
நேற்றைய நிலவரப்படி காலை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4,293க்கு விற்பனையான நிலையில், மாலை கிராமிற்கு ரூ. 29 குறைந்து ரூ. 4,264க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் விலை நேற்று காலை ரூ. 56 உயர்ந்து ரூ. 34,344-க்கு விற்பனையான நிலையில் மாலை, ரூ. 232 குறைந்து ரூ.34,112க்கு விற்பனையாகிறது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.29 குறைந்து, ரூ.4,238-க்கு விற்பனை ஆகிறது. அதாவது சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ரூ.33,904க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.71.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.