சுவையான காரக்குழம்பு கருணைக்கிழங்கு காரக்குழம்பு... ரெசிபி இதோ!

By Kalai SelviFirst Published Oct 5, 2024, 2:21 PM IST
Highlights

Karunai Kilangu Kara Kulambu Recipe : காரசாரமான சுவையில் கருணைக்கிழங்கு காரக்குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

மதியம் சாதத்திற்கு காரசாரமான சுவையில் ஏதாவது குழம்பு வைத்து சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கருணைக்கிழங்கு இருந்தால் அதில் புளிக்குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த கருணைக்கிழங்கு கார குழம்பு சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மிகவும் சுலபமான முறையில் செய்து முடித்து விடலாம்.

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை இந்த குழம்பு செய்து கொடுங்கள் அவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த குழம்பிற்கு நீங்கள் அவித்த முட்டை, வடகம், அப்பளம் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் காரசாரமான சுவையில் கருணைக்கிழங்கு காரக்குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  கேரளா ஸ்டைலில் சின்ன வெங்காயம் புளிக்குழம்பு.. ரெசிபி இதோ!

கருணைக்கிழங்கு காரக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 ஸ்பூன்
புளி கரைசல் - சிறிதளவு
பூண்டு - 10 (பொடியாக நறுக்கியது)
தனியா பொடி - 1 1/2 ஸ்பூன்ன்
குழம்பு பொடி - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  காரசாரமான சுவையில் வெண்டைக்காய் புளிக்குழம்பு... இப்படி ஒருமுறை செஞ்சு சாப்பிடுங்க!

செய்முறை :

கருணைக்கிழங்கு கார புளி குழம்பு செய்யும் முதலில் எடுத்து வைத்த கருணைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவு பிறகு குக்கரில் போட்டு 2 விசில் விட்டு நன்கு அவிழ்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதன் தோலை உரித்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்ததாக அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மஞ்சள் தூள், தனியா தூள், குழம்பு தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். 

இப்போது இதில் புளி கரைசலை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்பு நன்றாக கொதித்ததும் அதில் அவித்து வைத்த கருணைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளுங்கள்.  பிறகு குழந்தை சுமார் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுகையில் கருணைக்கிழங்கு காரக்குழம்பு தயார். 

இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!