காலையில 'இத' மட்டும் செஞ்சா போதும்.. சர்க்கரையின் அளவு உயராது!

By Kalai SelviFirst Published Aug 10, 2024, 7:30 AM IST
Highlights

Blood Sugar Control Tips : உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் காலையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்க சுலபமான வழிகள் இங்கே.

உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யும் திறனை இழக்கும் போது அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது அது சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும் . இது தீராத நோய் ஆகும். இன்சுலின் குறைபாடு உடலில் குளுக்கோஸின் அதிகப்படியான சேமிப்புக்கு வழிவகுக்கும் இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

இந்நிலையில், சில சமயங்களில் சிலருக்கு காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயரும். இது ரத்த குளுக்கோஸ் அளவுகளில் திடீர் அதிகரிப்பு ஏற்படுவதால் நடக்கிறது. காலையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வதைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான காரியம். ஆனால், சில இயற்கை வீட்டு வைத்தியங்களை பயன்படுத்துவதன் மூலம் இதை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். மேலும் இதன் மூலம் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. இப்போது அவற்றை குறித்து இங்கு பார்க்கலாம்.

Latest Videos

இதையும் படிங்க:  நீங்க சரியா தூங்கமாட்டீங்களா? அப்ப உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பிருக்கு.. முழு விவரம் இதோ!!

1. இலவங்கப்பட்டை நீர்:  இலவங்கப்பட்டை நீர் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது குடிக்கும் போது இரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம். மேலும், இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.

2. பாகற்காய் ஜூஸ்: பாகற்காய் என்றாலே முகம் சுழிப்பவர்கள் பலர். ஆனால், இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பெரிதும் கட்டுப்படுத்த உதவுகிறது. தொடர்ந்து, பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

3. ஊற வைத்த வெந்தயம்: இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வெந்தயம் பெரிதும் உதவுகிறது. வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அது உடலில் இன்சுலின் உற்பத்தியை ஒழுங்கு படுத்துகிறது மற்றும் உண்ணாவிரதத்தின் போது அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். இதற்கு வெந்தயத்தை இரவு முழுதும் ஊறவைத்து, பிறகு மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் சிறப்பு மேம்படும்.

இதையும் படிங்க:  இந்த 1 பொடியை சுடு தண்ணீரில் கலந்து குடிங்க.. சர்க்கரை நோய்க்கு குட் பை சொல்லுங்க!!

4. நெல்லிக்காய் ஜூஸ்: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, காலை நேரத்தில் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதை தடுக்க இது உதவுகிறது.

5. மஞ்சள் பால்: இதில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளது. தினமும் காலை ஒரு கப் இந்த பாலை குடித்து வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தலாம். மேலும், இரவு படுக்கும் முன்னும் இந்த பாலைக்குடித்து வந்தால் காலையில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

6. துளசி டீ: துளசி இலை அபரிதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் காலையில் இந்த துளசி தேநீர் குடித்தால் மன அழுத்தம் குறையும், இன்சுலின் உணர்திறன் மேம்படு மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும். எனவே, சர்க்கரை நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த தவறாமல் இதை குடியுங்கள்.

7. கற்றாழை ஜூஸ்: தினமும் காலை வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிப்பது தடுக்கப்படும் மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!