பலரிடம் உடலுறவு கொள்வதால் வருவதல்ல எய்ட்ஸ்..! இவரிடம் செல்வதால் மட்டுமே...

First Published Dec 23, 2017, 3:57 PM IST
Highlights
HOW THE AIDS SPREADS AND WHAT IS THE SIGNS AND SYMPTOMS


எய்ட்ஸ் நோய் என்றாலே,அதனால் உடலளவில் பாதிப்பு ஏற்படுவதை விட,மனதளவில் தான் அதிகம் பாதிப்பு முதலில் ஏற்படும்.

எய்ட்ஸ்

எய்ட்ஸ் என்றால் என்ன....நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலும் அழித்து கடைசியில் மரணத்தை நோக்கிய பயணம் என்றே கூறலாம் ..

ஆனாலும் எய்ட்ஸ் எப்படி வருகிறது என்ற புரிதல் இன்றளவும் பெரும்பாலோருக்கு இல்லை என்றே சொல்லலாம்...

பல பேருடன் உடலுறவு கொள்வதால் வருவது அல்ல எய்ட்ஸ் நோய்....

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் தெரிந்தோ தெரியாமலோ ,  உடலுறவு கொள்வதால்,அவரிடமிருந்து அப்படியே பற்றிகொள்ளும்.அதே சமயத்தில்,தனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்பதை கூட அறியாமல்  பலரும்,பல பேரிடம் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்வதால் மிக எளிதில் பரவுகிறது.

உதாரணம்

ஒரு ஆண்,தன் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு விலைமாதுவிடம்  சென்றார் என்றால், ஒரு வேளை அவருக்கு எய்ட்ஸ் இருக்குமேயானால், கண்டிப்பாக இந்த ஆணுக்கும் எய்ட்ஸ் வரும்,பின்னர் தன் மனைவியிடம் உறவு கொள்ளும் கணவர்,மனைவிக்கும் எய்ட்ஸ் நோயை பரப்புகிறார்.

அதாவது ஒருவர் செய்யும் தவறினால்,உத்தம மனைவி மார்களும் பலி ஆகிறார்கள்...சமூதாயத்தில் இழிவாக பார்க்கப்படுகிறார்கள்...

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,எய்ட்ஸ் நோய் தனக்கு வந்திருக்குமோ என பலரும் மனதிற்குள் குமுறி கொண்டிருகின்றனர் அல்லவா...அதாவது, தவறு செய்தவர்கள் இதை பற்றி நினைப்பார்கள் அல்லவா.....

கவலை வேண்டாம்....எய்ட்ஸ் நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம் ...

எடை குறைதல்

தொடர்ந்து இருமல் வருவது ...

தசைககள் மற்றும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கும்...

களைப்பு

தலைவலி

தோலில் பெரிய மாற்றம்

தோலில் எரிச்சல்,அரிப்பு,சொரசொரப்பு அனைத்தும் ஏற்படும்.

வாயில்  வெண்புள்ளிகள்

கை கால்  நகங்கள் பிரிதல் 

பருக்கள் போன்று  முகத்தில்  தோன்றுதல்....

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதாவது தென்பட்டாலோ அல்லது தொடர்ந்து இருந்து வந்தாலோ,உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று,அங்குள்ள தனி பிரிவில் ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

குறிப்பு : உடல் திரவியங்கள்  மூலமும் எய்ட்ஸ் பரவும்.அதாவது ரத்தம் மூலமாகவும் பரவும்.

click me!