15 வயது மாணவனை கடத்திச் சென்று செக்ஸ்! 30 வயது சல்லாப ஆசிரியை கைது!

First Published Jul 25, 2018, 1:14 PM IST
Highlights
Woman teacher held for sex with student


தன்னிடம் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவனை கடத்திச் சென்று அவனுடன் உல்லாசமாக இருந்த பெண் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் பதேஹாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றிய 30 வயதான பெண் ஆசிரியர் ஒருவர், தன்னிடம் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் மயக்கும் விதமாக பேசியுள்ளார். பின்னர் அவனிடம் செல்போன் எண்ணை கொடுத்த அவர், அடிக்கடி மாணவனை தொடர்பு கொண்டும் பேசியுள்ளார். பெண் ஆசிரியரின் பேச்சில் மயங்கிய மாணவனும் காதல் வலையில் விழுந்துள்ளான்.

இருவரும் பள்ளி நேரத்திலும் பள்ளி நேரம் முடிந்தும் செல்போனில் பேசுவதும், வாட்ஸ் ஆப்பில் உரையாடுவதுமாக இருந்தனர். செல்போனிலேயே மாணவன் நீண்டநேரம் பொழுதை கழிப்பதை கவனித்த பெற்றோர், இது குறித்து கேட்டபோது, பெண் ஆசிரியரிடம் பாடம் தொடர்பாக சந்தேகம் கேட்பதாகக் கூறி உண்மையை மறைத்துள்ளான். அதை நம்பிய பெற்றோரும் அவனது பேச்சு மற்றும் தகவல் பரிமாற்றத்தை கண்டுகொள்ளாமல் இருந்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காதலை வளர்த்த பெண் ஆசிரியரும், மாணவனும் கடந்த வாரம் வீட்டில் இருந்து மாயமாகினர். பதேஹாபாத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள ஹிசார் பகுதிக்குச் சென்ற இருவரும், அதன்பின்னர் டெல்லிக்கு சென்று, அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்துள்ளனர். 2 நாள் டெல்லியிலேயே உல்லாசமாக இருந்த பெண் ஆசிரியரும், மாணவனும் அதன்பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா பகுதிக்குச் சென்று, அங்கும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இதனிடையே, மகனை காணாத பெற்றோரும், பெண் ஆசிரியரை காணாத தனியார் பள்ளி முதல்வரும் காவல்துறையினர் புகார் அளித்தனர். பெண் ஆசிரியர் தனது செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றதால், அவர் இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் தவித்த காவல்துறையினருக்கு மாணவனின் செல்போன் சிக்னல் கைகொடுத்தது. மாணவனின் செல்போன் சிக்னல் பின் தொடர்ந்து சென்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ரா பகுதி ஓட்டலிலேயே இருவரையும் கையும் களவுமாக கைது செய்த காவல்துறையினர், அவர்களை ஹரியானாவுக்கு அழைத்து வந்தனர்.

 பெண் ஆசிரியரையும், மாணவனையும் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திய காவல்துறையினர், இருவரும் உடலுறவு கொண்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, பெண் ஆசிரியர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனுக்கு வயது 15 தான் என்பதால், அவனை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

click me!