தடுப்பில் மோதி ஹெலிகாப்டர் விபத்து - உயிர் தப்பிய மராட்டிய முதல்வர்..!!

First Published May 25, 2017, 12:47 PM IST
Highlights
Maharashtra CM Devendra Fadnavis chopper crash lands in Latur


மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

ஹெலிகாப்டர், மூலம் தனது உதவியாளர் உள்பட சிலருடன் தேவேந்திர பட்னாவிஸ் சென்றார். லட்டூர் பகுதியில் உள்ள ஹெலிபேடில், ஹெலிகாப்டர் இறங்கியது. அப்போது, திடீரன அங்கிருந்த தடுப்பில் மோதி ஹெலிகாப்டர் நிலை தடுமாறியது.

இதை பார்த்தது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள், அதில் இருந்து கீழே குதித்தனர். சுமார் 10 அடிக்கு மேல் இருந்து குதித்த அவர்கள் யாருக்கும், அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.

Our helicopter did meet with an accident in Latur but me and my team is absolutely safe and ok.
Nothing to worry.

— Devendra Fadnavis (@Dev_Fadnavis) May 25, 2017

இதுதொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-  ஹெலிகப்டர் விபத்தில் இருந்து தப்பி அதிர்ஷ்டவசமாக நானும், என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளும் நலமாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கார்நாடக மாநிலத்தில், பாஜகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை சவுந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதேபோல் ஆந்திர மாநில முதல் ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம்  இந்திய அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!