தனது நண்பனுடன் உடலுறவு செய்யச் சொல்லி மனைவியை வற்புறுத்தியதால் மனைவியின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் அசோக்குமாருக்கும் சுப்ரியாவிற்கும் கடந்த 7 மாதங்கள் முன்பு திருமணமானது.
கேன்கேறி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த சுப்ரியா. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையறிந்த சுப்ரியாவின் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், ஆனால் சுப்ரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து மருமகன் அசோக் மீது சுப்ரியா தாய் அந்தோனம்மா புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகளை அசோக் அவரது நண்பருடன் உடலுறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதாகவும், சுப்ரியா மறுத்ததால், அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து அசோக் துன்புறுத்தி வந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுப்ரியாவின் தாயார் அந்தோனம்மா கூறுகையில், கேரளாவுக்கு தியான வகுப்பு ஒன்றுக்கு சென்றபோது சுப்ரியாவுடன், அசோக்கிற்கு பழக்கம் ஏற்பட்டது. அசோக்கை காதலிப்பதாக கூறி, எங்களையெல்லாம் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். ஆனால், அவரது முடிவு இவ்வளவு மோசமானதாக போய்விட்டது. அசோக் தன்னை கொடுமைப்படுத்தியதை சுப்ரியா இதுவரை எங்களிடம் கூறவில்லை. கடந்த ஏழு மாதங்களாக அசோக் கொடுத்த துன்பத்தை தாங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மகளிர் உதவி மையத்தில், எனது மகள், அசோக் நடந்துகொண்ட விதத்தை பற்றி புகார் அளித்தாள். அங்குள்ள நிபுணர்கள், இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுத்தனர். அங்கு, தான் சரியாக இருப்பதாக உறுதியளித்து திரும்பிய அசோக், மீண்டும், எனது மகளிடம் தகராறு செய்தார். தனது நண்பனுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியிருக்கிறார். புகார் கொடுத்ததை வைத்தே பிரச்சினையை கிளப்பியுள்ளார். எனது மகள் கொடுத்த புகாரரை நான் படித்து பார்த்ததால் தான் எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது என இவ்வாறு அன்தோனம்மா கூறினார்.
அன்தோனம்மா புகாரை ஏற்றுக்கொண்டுள்ள கெங்கேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்ரியாவின் கணவர் அசோக்கை கைது செய்துள்ளனர்.