அய்யோ இப்படியும் நடக்குமா ?  4 மாத குழந்தையை கற்பழித்து கொன்ற  காமுகன் !!

First Published Apr 21, 2018, 2:02 PM IST
Highlights
8 months old female child rape and killed


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பெற்றோர் அருகில் தூங்கிக் கொண்டிருந்த  8 மாத குழந்தையை நள்ளிரவில் தூக்கிச் சென்ற இளைஞர்  பலாத்காரம் செய்து  கொலை செய்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ராஜ்வாடா கோட்டை அருகே சாலையில், பலூன் விற்கும் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் 8 மாத குழந்தையுடன் நேற்று இரவு சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தார்.

அவர் காலையில் எழுந்து பார்த்த போது, குழந்தையை காணவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் தேடிப் பார்த்த போது, அருகில் உள்ள கடைக்குள் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. தலை மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்தன. 



இது தொடர்பாக போலீசாரிம் அந்த பலுன் வியாபாரி  புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார்   அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில், குழந்தை அருகில் தூங்கி கொண்டிருந்த  இளைஞர் ஒருவர் குழந்தையை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!