Siragadikka Aasai Serial 29 June 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், தான் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக விஜயாவிடம் சொல்லி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மனோஜ், தன்னுடைய ஷோரூமிற்கு நியூமராலஜிஸ்டை வரச்சொல்லி, கனகாவின் அம்மா கல்யாணம் பற்றி பேசியதை சொல்கிறார். அதற்கு அந்த நியூமராலஜிஸ்ட், வாழ்க்கையில் சந்தர்ப்பம் தேடி வரும் அதை மிஸ் பண்ணிடவே கூடாது. ரோகிணி உன்னோட கடந்த காலம், அவளை நினைச்சுக்கிட்டு நீ வர்ற வாய்ப்பை தவறவிடக் கூடாதுனு அட்வைஸ் பண்ணுகிறார். இருந்தாலும் வீட்டில் ஒத்துக் கொள்வார்களா என மனோஜ் கேட்க, அதற்கு அவர் உன் வாழ்க்கையில் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பு நிறைய இருக்கு, அதனால் உன் வீட்டில் கண்டிப்பா ஒத்துக்குவாங்க என சொல்கிறார்.
இதனால் மனோஜும் அந்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கிறார். மறுபுறம் வீட்டில் முத்து தன்னுடைய தந்தை அண்ணாமலையை அழைத்து, ரேகாவுக்கும், சத்யாவுக்கும் பாட்டி ஊர்லயே வச்சு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு, முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார். அப்போது அருகில் இருந்த விஜயா, அதைக்கேட்டதும் மிகுந்த உற்சாகம் அடைகிறார். அந்த கல்யாணத்துக்கு நானும் வர்றேன் என சொல்கிறார். மீனா வீட்டு கல்யாணம் தான் நீ வரமாட்டியே என அண்ணாமலை கேட்க, மீனா யாரு, நம்மவீட்டு பொண்ணு தான் என சொல்லி ஷாக் கொடுக்கிறார் விஜயா.
36
விஜயாவிடம் கல்யாண மேட்டரை சொன்ன மனோஜ்
விஜயா பாசத்தோடு, அந்த கல்யாணத்திற்கு செல்லவில்லை. சிந்தாமணியின் பொண்ணு ரேகா, அந்த வெறும் பைய சத்யாவை கல்யாணம் பண்ணிக்கணும், அதைப்பார்த்து சிந்தாமணி வயிறு எரியணும் என்கிற நோக்கத்தில் தான் கல்யாணத்துக்கு செல்ல சம்மதம் தெரிவித்திருக்கிறார். இப்படி இவர்கள் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து பப்பரப்பா மனோஜ் எண்ட்ரி கொடுக்கிறார். அப்போது அங்கிருந்த தன்னுடைய அம்மாவிடம், சந்தோஷ் தனக்காக ஒரு கோடீஸ்வர வீட்டு பெண்ணை பார்த்திருப்பதாக சொல்கிறார்.
அதற்கு விஜயாவும் ஓகே சொல்ல, ஆனால் அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சனை இருக்கு. அவளுக்கு மனநிலை சரியில்லை. நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட அவளுக்கு மனநலம் சரியாகிடும் என சொல்கிறார். உடனே விஜயா, அவரிடம் 108 தேங்காய் வாங்கிட்டு வா என சொல்கிறார். எனக்கு பொண்ணு கிடைச்சதுனா 108 தேங்காய் உடைக்குறேன்னு வேண்டிக்கிட்டீங்களா என கேட்கிறார். இல்ல இந்த ஐடியாவை கொடுத்த உன்னோட ஃபிரெண்டு மண்டைல உடைக்குறதுக்கு என சொல்வதோடு, நான் எக்காரணத்தை கொண்டும் இந்த சம்மதத்துக்கு ஒத்துக்க மாட்டேன் என கூறிவிடுகிறார்.
56
அருணிடம் சிக்கிய சீதா
மறுபுறம் சீதா தன்னுடைய கணவரிடம் தாங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு முத்துவின் பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அவர் மீது சந்தேகப்பட்ட அருண், அவரை பின் தொடர்ந்து வந்துவிடுகிறார். அப்போது அவர் அங்கு வருவதை அறிந்த சீதா, அங்கிருந்த ரேகாவையும், சத்யாவையும் ஒரு ரூமில் ஒளிந்துகொள்ளச் சொல்கிறார். பின்னர் வழக்கம்போல் சீதாவிடம் சண்டைபோட்டுவிட்டு செல்கிறார் அருண்.
66
ரோகிணியை சந்திக்கும் விஜயா
இறுதியாக, ரோகிணி, பார்வதி வீட்டில் அமர்ந்திருக்க, அப்போது அவர் விஜயாவுக்கு போன் போட்டு வரச் சொல்கிறார். ஏனெனில் ரோகிணி டைவர்ஸ் கொடுக்க சம்மதித்துவிட்டதால், அதைப்பற்றி பேச தான் விஜயாவை அங்கு வரச் சொல்லி இருக்கிறார். அங்கு வந்த விஜயா, ரோகிணியை பார்த்ததும் அவரை திட்டித்தீர்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.