அதே போல் விஜய் டிவி, ஒளிபரப்பாகி வரும் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலும் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது. வெண்ணிலா வெற்றிகரமாக தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து விட்ட நிலையில், சூர்யா வெண்ணிலாவை திருமணம் செய்த ரகசியம் இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் தெரிந்த பின்னர், இவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் வாழ்க்கையில் ஒன்று சேர போவதாகவும், இதன் பின்னர் இந்த சீரியலும் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது,, இந்த சீரியலை விரும்பி பார்த்து வரும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.