சில்லு சில்லாய் சிதறிய பாண்டியன் ஸ்டோர் குடும்பம்.. கண்ணன் - ஜீவாவை தொடர்ந்து இவரும் வெளியேறுகிறாரா?

First Published Mar 30, 2023, 1:26 PM IST

பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கடந்த ஒரு வாரமாகவே எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், ஜீவா - கண்ணனைத் தொடர்ந்து, மற்றொரு சகோதரரும் 'பாண்டியன் ஸ்டோர்' குடும்பத்திலிருந்து வெளியேறுகிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது வெளியாகி வரும் புரோமோக்கள்.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களுமே தனித்துவமான கதைக்களம் கொண்டவை. அந்த வகையில், நான்கு அண்ணன் - தம்பிகள் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

மிகவும் சந்தோஷமாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது ஒருவர் பின் ஒருவராக சண்டை போட்டுக்கொண்டு, குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் மூல காரணம், சமீபத்தில் நடந்த மீனாவின் சகோதரி திருமணம் தான். இந்த ஒரே திருமணத்தில் தான் நினைத்ததையும் நடத்தி காட்டி விட்டார், மீனாவின் தந்தை ஜனார்த்தனன்.

தேவதை வம்சம் நீயோ.! குந்தவை திரிஷாவின் கியூட்னஸில் கவிழ்ந்த ரசிகர்கள்.! PS2 ஆடியோ லான்ச் போட்டோஸ்!

திருமணத்தில் கண்ணன் செயலை பெரிதாகியதால், ஒற்றுமையாக இருந்த 'பாண்டியன் ஸ்டோர்'  குடும்பம் தற்போது சில்லு சில்லாக சிதறி போய்விட்டது. மீனாவின் தங்கை திருமணத்தின் போது, கையில் காசு இருக்கு என்பதால் கண்ணன் - கதிர் ஆகியோர் தனித்தனியாக மொய் வைத்தனர். மேலும் பாண்டியன் ஸ்டோர், பெயரில் மொய் வைக்க கூறி... மூர்த்தி கொடுத்த பணத்தை கண்ணன் தனம் - மூர்த்தி என்கிற பெயரில் மோய் வைத்து விட, ஜீவா - மீனா பெயர்,மொய் லிஸ்டில்  பெயர் இல்லாமல் போகிறது.

இதை மிகப்பெரிய பிரச்னையாக்கிய ஜீவா,தன்னை அனைவரும் புறக்கணிப்பதாக எண்ணி, தன்னுடைய அண்ணனிடம் சண்டை போட்டுகொண்டு, வீட்டை விட்டே வெளியேற முடிவு செய்கிறார். மூர்த்தி பிரச்சனைக்கு காரணம் கண்ணன் தான் என தெரிவித்தும், விடாப்பிடியாக ஜீவா மனைவி மீனா மற்றும் குழந்தை கயலை அழைத்து கொண்டு வெளியேறுகிறார்.

பெற்ற தாயின் ஒரு மார்பை வெட்டி எடுத்துக்கொள் என்கிறீர்! பல கேள்விக்கு விடை சொல்ல வரும் 'பொன்னியின் செல்வன் 2'

கண்ணன் செய்த தவறை மூர்த்தி கேட்டதால், கடுப்பாகும் ஐஸ்வர்யா... கண்ணனை பேசவிடாமல் தடுத்து பெட்டி படுக்கையோடு வெளியேறினார். தற்போது மூர்த்தி மற்றும் கதிர் ஆகிய இருவர் மட்டுமே ஒன்றாக உள்ளனர். இரண்டு தம்பிகள் வெளியேறிய விரக்தியில்... நீ மட்டும் ஏம்பா என்கூட இருக்க நீயும் போக வேண்டியது தானே என கண்ணீரோடு கேக்கிறார். 

பின்னர் நீ ஏன் போகணும். இது உன் வீடு தானே நான்தான் போகணும் என புலம்பியபடி உடைந்து அழுகிறார். எனவே ரசிகர்கள் பலரும், மூர்த்தியும் பாண்டியன் ஸ்டார் சீரியலில் இருந்து வெளியேறுவாரா? என கேள்வி  வருகிறார்கள். இதுகுறித்த புரோமோவும் தற்போது வெளியாகி உள்ளது.

வாவ்... செய்திவாசிப்பாளர் கண்மணிக்கு நடந்த வளைகாப்பு! மேடையை வளையலால் அலங்கரித்த காதல் கணவர் நவீன்! போட்டோஸ்..

click me!