Priyanka Nalkari: திடீர் திருமணம்... இனி இப்படி சொன்னா கொன்னுடுவேன்.! ஆவேசமாக பதிலளித்த ரோஜா சீரியல்!

First Published Mar 28, 2023, 7:23 PM IST

ரோஜா சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி, சமீபத்தில் மலேசிய முருகன் கோவிலில், திருமணம் செய்து கொண்ட நிலையில்... தன்னுடைய திருமணம் குறித்து இப்படி பேசினால்? கொன்று விடுவேன் என செல்லமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

'ரோஜா' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு 'அந்தரி பந்துவயா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை என்பதால், தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, காஞ்சனா 3, போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
 

வெள்ளித்திரையில் முட்டி மோதி பார்த்தும், வாய்ப்புகள் கிடைக்காததால்... சீரியல் நாயகியாக முடிவு செய்தார். அதன்படி சன் டிவியில் இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
 

சமந்தாவை விவாகரத்து செய்தபின்னர் மிகப்பெரிய தொகைக்கு புது வீடு வாங்கிய நாகசைதன்யா! நடிகையோடு குடியேறுகிறாரா?

சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சீதா ராமன்' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். ஒரு பெண்ணுக்கு அழகு என்பது முக்கியமல்ல, நல்ல குணம் தான் முக்கியம். என்பதை மைய கருத்தாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 
 

இந்நிலையில், பிரியங்கா நல்காரி திடீர் என, தன்னுடைய நீண்ட நாள் காதலர்... ராகுல் கிட்டு என்பவரை மலேசியா முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர் திருமணம் செய்து கொண்டது வேறு யாரும் அல்ல... பிரியங்கா நல்காரியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர், பிரேக் அப் செய்து விட்டு சென்றதாக கூறப்பட்ட காதலரை தான்.

பலே பிளான்.. பெரிய தொகையை அபேஸ் செய்த பிக்பாஸ் அபிநய் மனைவி! தீவிரமாக தேடும் போலீஸ்.. 6 பிரிவில் வழக்கு பதிவு!
 

இருவரும் ஒரே பீல்டீல் இருந்தால் பிரச்சனையே வராத என இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். இவர்களில் காதலுக்கு இது வீடு தரப்பிலும் பச்சை கோடி காட்ட... கடந்த 2018 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. பின்னர் இருவருமே சீரியலில் படு பிஸியாக இருந்துள்ளனர். பேச கூட நேரம் இல்லாத நிலையில், இதுவே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, காரணமாக அமைந்தது. எனவே பிரியங்கா விடம் கோபித்துக் கொண்டு, இந்த பீல்டே வேண்டாம் என மலேசியா போய் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து விட்டதாகவும், தன்னுடைய ஃபோன் அழைப்புகளை கூட எடுப்பதில்லை என மன வேதனையோடு பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
 

ஒருவழியாக இருவருக்குள்ளும் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்து நிச்சயதார்த்தம் நடந்து 5 வருடங்கள் ஆன பின்னர் மலேசிய முருகன் கோவிலில் இருவரும் திடீர் என திருமணம் செய்து கொண்டனர். இது குறித்த சில புகைப்படங்களையும், பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

லோ நெக் ஜாக்கெட்டில்... இன்ஸ்டாகிராமை சூடேற்றிய கீர்த்தி சுரேஷ்! தாறுமாறு லுக்கில் செம்ம ஹாட் போஸ்!
 

இந்த நிலையில், பிரியங்கா நல்காரி ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக பலரும் கூறி வந்த நிலையில், இதனை மறுத்துள்ள பிரியங்கா நல்காரி, சமீபத்தில் லைவ் ஒன்றில் பேசியபோது...  தன்னுடைய திருமணம் குடும்பத்தினர் சம்மதத்துடன் தான்  நடந்தது என்றும், இது ரகசிய திருமணம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் தன்னுடைய கணவரின் வீட்டில் தற்போது வரை தங்கள் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அவர்கள் ஏற்றுக்கொண்டவுடன் குடும்பத்தோடு இணைந்து இந்த சந்தோஷமான தருணத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே  இதனை ரகசிய திருமணம் என்று சோசியல் மீடியாக்களில் பலர் கூறுவதை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் என்று கொஞ்சம் காட்டமாக கூறியுள்ள பிரியங்கா நல்காரி, இனி யாராவது இதை ரகசிய திருமணம் என்று கூறினால்... கொன்று விடுவேன் மிரட்டலும் பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

AK62 படத்திற்கு முன்பே.. டிஜிட்டலில் வெளியாகும் அஜித்தின் வேற லெவல் படம்! ரசிகர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்!

click me!