இல்லத்தரசிகளின் பொழுதுபோக்குக்கு முக்கிய பங்காற்றி வருவது சீரியல்கள் தான். முன்பெல்லாம் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல், தற்போது மவுசு அதிகரித்ததன் காரணமாக வாரத்திற்கு 6 நாட்களாக அதிகரித்துவிட்டனர். இல்லத்தரசிகளை தாண்டி கணவன்மார்களையும், இளைஞர்களையும் கவரும் வண்ணம் சீரியல்கள் தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகின்றன.