சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை சந்தித்த ரோகிணி, அவரிடம் தான் மீண்டும் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன் என சவால்விடுத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை வீட்டை விட்டு துரத்திவிட்டுள்ளார் விஜயா. இதனால் தன்னுடைய அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார் மீனா. அவரை சந்திக்க ஸ்ருதி, அவரின் பூக்கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது ரோகிணியால் தான் நம் வீட்டில் இப்படியெல்லாம் நடக்கிறதோ என தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். அவர்கள் ரோகிணியை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே, ரோகிணி அங்கு காரில் எண்ட்ரி கொடுக்கிறார். அவர் மீனா மற்றும் ஸ்ருதியை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
25
ரோகிணியில் திமிர் பேச்சு
அங்கு சென்று மீனாவிடம், இப்போ நாம மூணு பேருமே அந்த வீட்டில் இல்லை என சொல்ல, இப்போ உனக்கு சந்தோஷமா என மீனா கேட்கிறார். கணவரை பிரிந்திருப்பதன் வலி என்பது இப்போ உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் ஈஸியா மீண்டும் அந்த வீட்டுக்குள் சென்றிருக்கிறோம். ஆனால் நீ அந்த வீட்டுக்குள் செல்வது நடக்கவே நடக்காது என கூறுகிறார் ஸ்ருதி. நீங்க ரெண்டு பேரும் எனக்கு சப்போர்ட் பண்ணுனீங்கனா உங்களுக்கு நல்லது, இல்லையென்றால் என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் ரோகிணி.
35
வீட்டில் மனோஜ் உடன் சண்டை போடும் முத்து
மறுபுறம் வீட்டில் மருமகள்கள் யாருமே இல்லாததால், முத்து, ரவி தான் எல்லா வேலையும் செய்கிறார்கள். ரவி சமையல் வேலையை கவனித்துக் கொள்ள, முத்து வீட்டிற்கு மாப் போடுகிறார். அப்போது அங்கு வரும் மனோஜ், எந்த வேலையும் செய்யாமல் சோபாவில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் எழுந்து போய் பாத்திரம் கழுவுடா என முத்து சொல்ல, அதெல்லாம் எனக்கு தெரியாது என சொல்கிறார் மனோஜ். பின்னர் அங்கு வரும் விஜயா, மனோஜ் எந்த வேலையும் பார்க்க மாட்டான் என சொல்ல, அவனை கெடுக்குறதே நீங்க தான் என முத்துவும், ரவியும் திட்டுகிறார்கள். இதையடுத்து வீட்டு வேலைக்கு ஆள் எடுக்க முடிவு செய்கிறார்கள்.
இதையடுத்து ரூமுக்குள் செல்லும் அண்ணாமலை, விஜயாவிடம் தனியாக பேசுகிறார். அப்போது மீனா இந்த வீட்டோட முதுகெலும்பு என கூறும் அண்ணாமலை, இனி எந்த ஜென்மத்திலும் மீனா மாதிரி ஒரு நல்ல மருமகள் உனக்கு கிடைக்க மாட்டாள் என கூறுகிறார். மீனாவை மீண்டும் இந்த வீட்டுக்கு கூப்பிடலாம் என அண்ணாமலை சொல்ல, அதை மட்டும் சொல்லாதீங்க என தடுக்கும் விஜயா, நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார். இதனால் கடுப்பான அண்ணாமலை, நாய் வாலை எப்படியும் நிமிர்த்த முடியாது. அது வேஸ்ட் என விஜயாவை குத்திக்காட்டுகிறார்.
55
முத்துவுக்கு வந்த டவுட்
மறுபுறம் முத்து, மீனாவின் பூக்கடைக்கு சென்று அவரை சந்தித்து பேசுகிறார். அப்போது ரோகிணி அங்கு வந்த விஷயத்தை சொல்லும் மீனா, நம் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அவள் தான் காரணமாக இருக்கக் கூடும் என ஸ்ருதி சந்தேகப்படுவதாக மீனா கூற, இருக்கலாம் மீனா, பார்லர் அம்மா இந்த மாதிரி ஃபிராடு வேலைகளை எல்லாம் செய்யக்கூடிய ஆள் தான். முதலில் அந்த பெண் சாமியார் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என கூறுகிறார். இதனால் முத்து விசாரணையில் இறங்க வேண்டும் என முடிவு செய்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.