ராஜியும் மீனாவும் எல்லோருக்கும் பாணகம் கொடுக்க, அந்த தருணம் சந்தோஷமாக மாறுகிறது. “நம்ம கடைக்கு பக்கத்திலேயே பாணக கடை போடலாம்” என்று பழனி மகிழ்ச்சியுடன் சொல்கிறார். ஆனால் அந்த மகிழ்ச்சியை சக்திவேல் உடனே உடைக்கிறார். “பொம்பளைங்க கடை போடுற அளவுக்கு நம்ம கடை இல்லை” என்று சொல்லி, சந்தோஷத்தை வேறு பக்கம் திருப்புகிறார்.
பாண்டியனின் பதிலடி… சக்திவேலுக்கு சுட்ட பதில்!
சக்திவேலின் வார்த்தைக்கு பாண்டியன் உடனே பதிலடி கொடுக்கிறார். “இதுவரை கோமதியை கடை பக்கமே வரவிட்டதில்லை… அப்படி இருக்கும்போது எப்படி பாணக கடை வைக்க சொல்லுவோம்?” என்ற பாண்டியனின் பதில், சக்திவேலின் பேச்சை மடக்குகிறது. இந்த இடத்தில், கோமதிக்காக குரல் கொடுக்கும் ஒரு குடும்பத் தலைவர் பாண்டியன்.
தொடரும் மோதல்… விருந்தா? போர் தொடக்கமா?
இன்றைய எபிசோடு முழுக்க, சமையல், பாசம், மரியாதை, மறைமுக விரோதம் என அனைத்தும் கலந்த ஒரு சினிமா காட்சியை போலவே நகர்ந்தது. கோமதி நினைக்கும் குடும்ப இணைப்பு கனவாக மாறுமா? அல்லது சக்திவேலின் திட்டம் அதில் குளறுபடி செய்யுமா?