Pandian Store: காலேஜூக்கு போன குமரவேலுக்கு அடி - உதை! சிக்கிய சுகன்யாவை வெளுத்து விட்ட மீனா!

Published : Apr 02, 2025, 12:04 PM ISTUpdated : Apr 02, 2025, 12:08 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சுகன்யா வீட்டில் வந்து மீனாவைப் பற்றி போட்டு கொடுக்கும் காட்சியுடன் தொடங்கி கடைசியில் மீனாவை சத்தம் போடும் காட்சியுடன் முடிவடைகிறது.  

PREV
16
Pandian Store: காலேஜூக்கு போன குமரவேலுக்கு அடி - உதை! சிக்கிய சுகன்யாவை வெளுத்து விட்ட மீனா!

பாண்டியன் ஸ்டோரிஸ் 2 சீரியலில் இன்றைய 443ஆவது எபிசோடில் சுகன்யா மற்றும் மீனா தொடர்பான காட்சிகளும், முத்துவேல் மற்றும் குமாரவேல் தொடர்பான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. 

26
மீனாவை பாண்டியனிடம் போட்டுக்கொடுத்த சுகன்யா

அரசியிடம் பேசுவதற்கு குமாரவேலுவை வரச் சொன்னது சுகன்யா, ஆனால், பாண்டியனிடம் வந்து வேறு விதமாக மீனாவைப் பற்றி போட்டுக் கொடுத்துள்ளார்.  மீனா தன்னை திட்டியதாவும், அவமானப்படுத்துகிறார் என்றும் பேசியுள்ளார்.

Pandian Stores Update: குமரவேல் போட்ட பிளான்! அரசியை காலேஜுக்கு அனுப்ப சம்மதிப்பாரா கோமதி?

36
மீனாவுக்கு ஆதரவாக பேசும் பழனிவேல்:

சரி, மீனா வந்ததும் கண்டிப்பதாக பாண்டியன் கூறியிருக்கிறார். இதே போன்று பழனிவேலுவிடமும் சொல்லவே, அதற்கு அவர் மீனா அப்படியெல்லாம் பேசாதே, நீ தான் ஏதோ தப்பா பேசியிருக்கிற, இப்போ கூட பொய் சொல்ற என்பது போன்று பழனிவேல் பேசியிருக்கிறார். அதற்கு சுகன்யா மீனா மற்றும் பழனிவேல் உறவு முறையை தவறாக பேசுகிறார்.

46
தவறாக பேசும் சுகன்யா:

அதற்கு அது அப்பா மகள் உறவு. நீ தப்பா பேசாதே என்று பழனிவேல் அவரை சத்தம் போடுகிறார். இதையடுத்து பாண்டியன் தனது மகள் அரசியை பார்க்க குமரவேல் காலேஜூக்கு போன விஷயத்தை முத்துவேலுவிடம் சொல்லியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த முத்துவேல் குமரவேலுவின் கன்னத்தில் அறைந்து, நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியேறிவிடு என்று மிரட்டுகிறார்.

Pandian Stores: சைலண்டாக மாப்பிள்ளை பார்த்து - நிச்சயதார்த்த தேதி குறித்த பாண்டியன்! அரசி சொன்ன வார்த்தை?

56
மீனாவை கண்டிக்கும் பாண்டியன்:

கடைசியாக சுகன்யா தன்னை திட்டிய மீனாவை நீங்கள் சத்தம் போடுவதாக சொன்னீங்க, ஆனால் எதுவும் கேட்கவில்லை என்று பாண்டியனிடம் கூறவே, அதற்கு கோமதி மீனாவை அழைத்து, ஏன் சுகன்யாவை தப்பாக பேசுன, அவள் உனக்கு வயதில் மூத்தவர், அப்படியெல்லாம் பேசக் கூடாது என்று கண்டிக்கிறார். 

66
எல்லா பிரச்சனைக்கும் கரணம் சுகன்யா என்பதை புரிந்து கொள்ளும் மீனா:

அப்போது செந்தில் அங்கு வருகிறார். அதோடு இன்றைய 443ஆவது எபிசோடு முடிவடைகிறது. சுகன்யா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்பதை மீனா தெளிவாக புரிந்து கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இப்போது வீட்டில் கேம் ஆடுகிறார் என்பதையும் மீனா மற்றும் செந்தில் இருவரும் புரிந்து கொண்டுள்ளனர். இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Pandian Stores: மயங்கி விழுந்த அரசி; பாண்டியன் எடுத்த முடிவால் நிம்மதியில் தங்கமயில்!

Read more Photos on
click me!

Recommended Stories