ஆனால் சந்திரகலாவின் பேச்சை சாமுண்டீஸ்வரி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவர் மீது எரிச்சலை வெளிப்படுத்துகிறார். மற்றொரு பக்கம், மயில்வாகனம் புதிய வேடத்தில் களமிறங்குகிறார். வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலதிபர் போல் நடித்து முத்துவேலை சந்திக்கும் அவர், சிவனாண்டியுடன் இணைந்து தொழில் செய்ய விருப்பம் இருப்பதாக கூறுகிறார். இதை நம்பிய முத்துவேல், மயில்வாகனத்தை சிவனாண்டியிடம் அறிமுகப்படுத்துகிறார். அந்த சந்திப்பில், கோவில் நகைகளை கைப்பற்ற உதவினால் ரூ.5 கோடி வழங்குவதாக ஆசை வார்த்தை கூறுகிறார்.
கார்த்திகை தீபம் அதிரடி திருப்பம்: ரேவதிக்கு 2-வது திருமணமா? சாமுண்டீஸ்வரி நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை!
புதிய திட்டம் தீட்டும் கார்த்திக்
இதன்மூலம் சிவனாண்டியை தனது திட்டத்தில் சிக்க வைக்க மயில்வாகனம் முயற்சிக்கிறார். இந்த முக்கிய தகவல் கார்த்திக்கிற்குச் சென்றடைய, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அவர் புதிய திட்டத்தை வகுக்கத் தொடங்குகிறார். இதே நேரத்தில், கார்த்திக்காக அன்புடன் தயாரித்த உணவுகளை எடுத்துக்கொண்டு ரேவதி அவரை சந்திக்க வருகிறார். இந்த சந்திப்பு எப்படி அமையும்? மயில்வாகனத்தின் திட்டத்தில் சிவனாண்டி சிக்குவாரா? கார்த்திக்கின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோட் நகர்கிறது.
ரேவதியை காப்பாற்ற ஏன் ஆம்புலன்ஸ் வரவில்லை: இயக்குநர் வச்ச பெரிய டுவிஸ்ட் – கார்த்திகை தீபம் சீரியல் பகீர் ரகசியம்!