அதன்பின்னர் சோழனையும் நிலாவையும் காட்டுகிறார்கள். பீச்சில் ஜோடியாக வலம் வருகிறார்கள். அப்போது தண்ணீரில் விளையாட ஆசைப்படுகிறார் நிலா. சோழன் நானும் வர்றேன்னு சொல்லி, ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு ஜாலியாக தண்ணீரில் விளையாடுகிறார்கள். அதன்பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது சோழனிடம் பேசும் நிலா, நீ பெரிய ஆளா வரணும், நீ ஏதாச்சும் சாதிக்கணும்னு அட்வைஸ் மழை பொழிகிறார். என்னங்க என்னைய விட்டு போகப் போறீங்களா, அதுக்காக தான் என்னிடம் அட்வைஸ் பண்ணுறீங்களா என சோழன் கேட்க, அதற்கு நிலா, நான் உன்னைய விட்டுலாம் போக மாட்டேன்.
நீ எனக்காக எவ்வளவோ பண்ணீருக்க, அதுக்காக நான் உனக்கு ஏதாச்சும் பண்ணனும்ல என சொல்ல, அதற்கு சோழன், நீ என்கூடவே இருந்தா அதுவே எனக்கு போதும் என சொல்கிறார். உனக்கு என்ன வேண்டுமானாலும் கேளு நான் தர்றேன் என நிலா சோழனிடம் கேட்க. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. சோழன் என்ன கேட்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.