ஷண்முகம் வைத்த டுவிஸ்ட்டால் முத்துப்பாண்டி கையால் கைதாகும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்

Published : Jan 06, 2024, 12:36 PM IST

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

PREV
14
ஷண்முகம் வைத்த டுவிஸ்ட்டால் முத்துப்பாண்டி கையால் கைதாகும் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற முத்துபாண்டியிடம் பரணி நான் ஷண்முகத்துக்காக வரல, என் மாமாவுக்காக வந்திருப்பதாக ஷாக் பதிலடி கொடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, முத்துப்பாண்டி இன்னும் 1 மணி நேரத்தில் ஷண்முகம் இங்க வரணும், இல்லனா ரத்னாவை விட மாட்டேன் என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் ஷண்முகம் ஸ்டேஷனுக்கு வந்து ஆஜராக முத்துப்பாண்டி ரத்னாவை ரிலீஸ் செய்கிறான். 

24
zee tamil Anna serial

அதனை தொடர்ந்து பிரியாணி வாங்கிட்டு வர சொல்லி சாப்பிட்டு விட்டு சண்முகத்தை வெளுத்தெடுக்க தயாராகிறான். பரணி உன்னை ஏதாவது பிளான் பண்ணிட்டு தானே வர சொன்னேன் என்று கோபப்பட அவன் கூலாக உனக்கு ஒன்னு ரெண்டு தெரியுமா பொண்டாட்டி என்று கேட்க பரணி கடுப்பாக கனி எனக்கு தெரியும்ணா நான் எண்ணவா என்று கேட்டு ஒண்ணு ரெண்டு சொல்ல ஐ.ஜியின் ஜீப் வந்து இறங்க முத்துப்பாண்டி பதற்றத்துடன் சிக்கன் பீஸுடன் சல்யூட் அடிக்க ஐஜி போதை பொருள் வாங்கினவனை பிடிச்சிட்ட, விற்றவனை பிடிக்க வேண்டாமா சொல்லி முத்துபாண்டியை அழைத்து செல்கிறார். 

இதையும் படியுங்கள்... பொம்பள Case போட்டுட்டாங்க... பூர்ணிமா வெளியேறியதும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளியிட்ட பிரதீப் ஆண்டனி

34
Anna serial Update

மறுபக்கம் சௌந்தரபாண்டி ஷண்முகம் ஆஜரான விஷயம் தெரிந்து பாக்கியத்திடம் என்னமோ உன் மருமகன் புலின்னு சொன்னயே, என் மகன் பிடிச்சிட்டான் என்று சந்தோசமாக சொல்ல இவனா புடிச்சனா? அவனா வந்தானா? என்று கேட்டு ஆப் ஆக்குகிறார். இங்கே ஸ்டேஷனலில் கனி என்னனா பண்ண என்று கேட்க ஷண்முகம் பிளாஷ்கட்டை ஓபன் செய்கிறான். 

44
Anna serial Today episode

சனியனை வைத்து ஐ.ஜியிடம் உண்மையை சொல்ல வைத்த விஷயம் தெரிய வருகிறது. அடுத்து ஐ.ஜி முத்துபாண்டியிடம் உங்க வீட்டிற்கு போய் காபி குடிச்சிட்டு போகலாம் என்று சொல்லி வீட்டிற்கு போக சௌந்தரபாண்டி போலீஸ் வருவதை பார்த்து முத்துபாண்டியே தன்னை கைது செய்யும் கனவை நினைத்து பார்த்து பயப்பட ஐ.ஜி உங்க அப்பா மேல தான் தப்பு கைது பண்ணு என்று சொல்ல முத்துப்பாண்டி வேறு வழியின்று சௌந்தரபாண்டியை கைது செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் செம்ம டுவிஸ்ட்... மறுபடியும் காப்பாற்றப்பட்ட மாயா! அடப்பாவமே இந்த வார எவிக்‌ஷனில் சிக்கியது இவரா?

Read more Photos on
click me!

Recommended Stories